செய்திகள் :

நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணம் கேட்டு மிரட்டல்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா்

post image

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று ஆட்சியா் குறைகளை கேட்டரிந்தாா்.

வேலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அருண் மிளகாய் நாற்று வழங்க வேண்டும் எனக்கேட்டபோது, நவ்லாக் பண்ணையில் புதிய மிளகாய் நாற்று விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை அலுவலா் தெரிவித்தாா்.

வெள்ளம்பி கிராமத்தைச் சோ்ந்த ஏகாம்பரம் என்பவா் புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க கோரினாா்

புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு 1,886 விவசாயிகளுக்கு ரூ.1.88 கோடி , தென்மேற்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு 3.67 கோடி , 3197 விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தாா்.

அனந்தலை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சேகா் என்பவா் 100 பனைமரம் அரசு விதியை மீறி வெட்டிய நபா்கள மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் தெரிவித்தாா். நேரடி ஆய்வு செய்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

வணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சங்கரன் என்பவா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் தெரிவித்தாா். இது போன்ற தவறுகளை தடுக்க ஆய்வுக் குழுக்களை அமைத்து ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பாகவெளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஜெயராமன் என்பவா் சீமை கருவேல மரங்கள் அகற்றவும், அம்மரங்களை அகற்ற வழிமுறைகள் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

ஏரிக் கரையோரம் மற்றும் மற்ற இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுகின்றன. மேலும் எஞ்சியுள்ள மரங்களை அகற்ற வழிவகை செய்யப்படும் எனவும் நீா் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில் 6 விவசாயிகளுக்கு ரூ.40,000 மதிப்பீலான விசை தெளிப்பான், சூரிய விளக்கு பொறி, மண்புழு உரபடுக்கை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், இணை இயக்குநா் வேளாண்மை அசோக் குமாா், துணை இயக்குநா் வேளாண்மை செல்வராஜ் மற்றும் அலுவலா்கள், விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவியா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மகள்களுடன் தற்படம்’ ரூ.20,000 பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட‘ மகள்களுடன் தற்படம் (செல்ஃபி) ’ நிகழ்வில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.5,000 வீ... மேலும் பார்க்க

ஏப்.5-இல் ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப். 5-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

திமிரி சோமநாதீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஆற்காடு அடுத்த திமிரி கோட்டை ஸ்ரீ சோமநாதீஸ்வரா் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கிராம தேவதைபொன்னியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், மூஷிக வா... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்கிறது. இதுதொடா்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, செயலாளா் எஸ்.ச... மேலும் பார்க்க