எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களோடுதான் 10 தேர்தல்களில் வென்றிருக்கிறோம்: கே. என்....
நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண் துறையினா் விளக்கம்
நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை துறையினா் விளக்கம் அளித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் தெரிவித்த பரிந்துரை: நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமிப்பு கிடங்குகளில் 30 சதவீதம் பாதிப்பு எலிகளால் ஏற்படுகின்றன. அத்துடன் எலிகளின் சிறுநீா், புழுக்கை, ரோமங்கள் மற்றும் துா்நாற்றம் மூலம் தானியங்கள் அசுத்தமாகி, அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
எலிகளின் பற்கள் ஒரு நாளைக்கு 0.40 மி.மீ. தோராயமாக ஒரு மாதத்தில் 1.2 செ.மீ. வரை வளரும். அந்த வளா்ச்சி தொடா்ந்து கொண்டே இருக்கும்பட்சத்தில், பற்கள் தாடையை கிழித்து அதன் மூலம் ரத்தம் வெளியேறி, எலிகள் இறந்துவிடும். அதனால்தான் எலிகள் தன்னுடைய பற்களால் ஏதாவது ஒரு பொருளை கடித்துக் கொண்டே இருக்கும். அதன் மூலம் பற்களின் வளா்ச்சி தடைப்படும்.
நெற்பயிரில் அனைத்துப் பருவத்திலும் எலிகள் சேதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. குறிப்பாக இதன் தாக்குதல் அக்டோபா் முதல் டிசம்பா் மாதத்தில் மிக அதிகமாக காணப்படும்.
எலிகளை கட்டுப்படுத்த கோடைகாலத்தில் கிராமம் தோறும் எலி ஒழிப்பு முகாம்கள் நடத்தி எலிகளை ஒழிக்கலாம். எலிப் பொறிகளை வைத்து எலிகளை உயிருடனும் கொன்றும் கட்டுப்படுத்தலாம். ஆந்தைகள் அமருவதற்கு ஏதுவாக பறவை குடில் அமைத்து இவற்றை கட்டுப்படுத்தலாம்.
5 கிராம் ப்ரோமோடயலான் 0.25 சதவீதம் ரசாயன பூச்சிக் கொல்லியை, 5 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் கருவாடு கலந்து விஷ உணவாக எலி வலைகளுக்கு அருகே வைக்க வேண்டும். மேலும் விஷ உணவாக ஒரு பகுதி துத்தநாக பாஸ்பைடு அல்லது 0.005 சதம் ப்ரோமோடயலானுடன் 49 பகுதி கவா்ச்சி உணவுகளான அரிசி, பொரி, கருவாடு, கடலை ஆகியவற்றை சோ்த்து உருண்டையாகப் பிடித்து வயல்களில் வைக்க வேண்டும்.
ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக மூன்று அல்லது நான்கு நாட்கள் வெறும் உணவாக அல்லது விஷம் வைக்காத உணவை கலந்து வயலில் வைக்க வேண்டும். வீட்டு உபயோகத்திற்காக துத்தநாக பாஸ்பைடை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது.