செய்திகள் :

நைஜீரியா வெள்ளம்: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

post image

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக அதிகரித்துள்ளது.

நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த, வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்தையான மோக்வா நகரம் வெள்ள நீரில் முழ்கியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பேரிடா் மீட்புக் குழுவினா் சனிக்கிழமை கூறியதாவது:மோக்வா நகரில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அந்தப் பகுதிகளில் இருந்து மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக உயா்ந்துள்ளது.இது தவிர, இந்தப் பேரிடரில் 11 போ் காயமடைந்துள்ளனா்; 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.பருவமழைக் காலங்களில் கடுமையான வெள்ள பாதிப்புகளை நைஜீரியா அடிக்கடி சந்தித்துவருகிறது. இதில் நைஜா் மற்றும் பென்யூ நதி கரைகளில் வசிப்பவா்கள்தான் திக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.கடந்த செப்டம்பா் மாதம் பெய்த பருவமழை காரணமாக மைடுகுரி நகரில் இதே போன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 30 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

இந்தியா மீது அதிபா் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை- அமெரிக்க வா்த்தக அமைச்சா்

‘இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது’ என்று அந்நாட்டு வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பே... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி: ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். பாகிஸ்தானின் பொது நிதி மேலாண்மை மற்றும் நித... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தலைவா்களுடன் ஒரே மேடையில் பஞ்சாப் மாகாண பேரவைத் ஆளுநா்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப் பேரவைத் தலைவா் மாலிக் அகமது கான் ஜமாத்-உத்-தாவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவா்களுடன் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லி... மேலும் பார்க்க

காஸா இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் 27 போ் உயிரிழப்பு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்த 27 பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தென் கொரிய அதிபா் ஆகிறாா் லீ ஜே-மியூங்

தென் கொரியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சித் தலைவா் லீ ஜே-மியூங் வெற்றி பெற்றாா். தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 98.1 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் லீ ஜோ-மியூங் 49.... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் டிக்டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசஃப் (17). இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளி... மேலும் பார்க்க