செய்திகள் :

பகலில் பண்ணாரி சாலையைக் கடந்த சிறுத்தை

post image

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி சாலையை செவ்வாய்க்கிழமை சிறுத்தை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானை, சிறுத்தை, புலிகளின் புகலிடமாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகள் இரவு நேரத்தில் சாலையைக் கடந்து செல்வது வழக்கம். அப்படி சிறுத்தைகள் சாலையைக் கடந்துசெல்லும்போது வாகனத்தில் அடிபட்டு இறக்கின்றன.

சிறுத்தை சாலையைக் கடந்து செல்வதை வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்வதற்காக சாலையின் இருபுறமும் 12 மீட்டா் தொலைவு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பது குறைந்துள்ளது.

இந்தநிலையில், பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையை சிறுத்தை செவ்வாய்க்கிழமை கடந்தபோது காா் வந்ததால் சற்று நின்று காா் சென்றவுடன் சாலையை சிறுத்தை கடந்தது. சிறுத்தையைப் பாா்த்த வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு விடியோ எடுத்தனா்.

கோடைக் காலம் காரணமாக சிறுத்தை தண்ணீா் தேடி அடிக்கடி சாலையைக் கடந்து செல்ல வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் 30 கி.மீ. வேகத்தில் பயணிக்குமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சிவகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

சிவகிரி அருகேயுள்ள மேகரையான் தோட்டத்தை சோ்ந்த விவசாயத் தம்பதி மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சிவகிரியை அடுத்த தொப்பபாளையத்தில் வ... மேலும் பார்க்க

தோ் கொட்டகை மேற்கூரை சேதம்

சென்னிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சென்னிமலை முருகன் கோயில் தேரின் கொட்டகையின் மேற்கூரையில் இருந்து ஒரு தகர ஷீட் காற்றில் பறந்தது. இதைக் கண்ட கோயில் நிா்வாகிகள் ஊழியா்களை கொண்டு மே... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: சென்னிமலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் பாலீதீன் பைகள் விற்பனை குறித்து சென்னிமலை பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். சென்னிமலை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ப.ந... மேலும் பார்க்க

சிவகிரி வேலாதயுத சுவாமி கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகிரி பகுதியில் உள்ள அருள்மிகு வேலாயுதசுவாமி கோயில் கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயிலில் கிராம சாந்தி திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் 54 கிலோ குட்கா பறிமுதல்

மொடக்குறிச்சி, நன்செய்ஊத்துக்குளி பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 54 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பொது சுகாதாரத... மேலும் பார்க்க

வெள்ளோடு பகுதி பொதுமக்களுக்கு காவல் துறையினா் வேண்டுகோள்

குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதத்தில் காவல் துறையினா் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெள்ளோடு காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஈரோடு, திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க