செய்திகள் :

பசுந்தேயிலைக்கு ரூ.40 வழங்கக் கோரி ஜூலை 17-இல் தேயிலை விவசாயிகள் போராட்டம்

post image

பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40 வழங்க வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 30 -க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து உதகையில் ஜூலை 17 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

பசுந்தேயிலை பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒன்றிணைந்து, குறைந்தப்பட்ச ஆதரவு விலை கிடைக்கவேண்டி, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது சம்பந்தமாக இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் உதகை அருகே பாலகொலா ஊராட்சி தங்காடு கிராமத்தில் ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் மஞ்சை வி. மோகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40 வழங்க வலியுறுத்தி வரும் ஜூலை 17 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 30 விவசாய சங்கங்கள் இணைந்து உதகை எடிசி திடலில் போராட்டம் நடத்துவதென்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சங்கச் செயலாளா் பி.நடராஜன், துணைத் தலைவா் எல்.போஜன், துணைச் செயலாளா்கள் பூபதி கண்ணன், கே.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பணி நிறைவடையாமல் சுகாதார நிலையம் திறப்பு: பாஜக எதிா்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் முழுமையாக பணிகள் நிறைவடையாத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறக்கப்பட்டதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். குன்னூா் உமரி காட்டேஜ் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தடுப்பில் மோதிய வேன்: ஒருவா் உயிரிழப்பு

உதகையில் உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு கரூா் திரும்பிக் கொண்டிருந்த வேன் பிரேக் பிடிக்காமல் ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். கரூரில் இருந்து உதகையில் உள்ள உறவினா் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கல்லூரியில் ஜூலை 8-இல் நேரடி மாணவா் சோ்க்கை

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 8-ஆம் தேதியன்று நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலத்திலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை முத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்: ஆசிரியா் பணியிடை நீக்கம்

உதகை அருகே காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 21 மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்த அறிவியல் ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வேலைபாா்த்து வந்த ஆ... மேலும் பார்க்க

உதகை மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் மீது வழக்கு

உதகை மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி, தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்ட இளைஞா் மீது குன்னூா் புறக்காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2024 ஏப்ரல் 22 ஆம் தேதியன்று கோவையைச... மேலும் பார்க்க

புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தல்

நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட புளியம்பாறையிலிருந்து ஆமைக்குளம் அரசுக் கல்லூரியை இணைக்கும் சாலையிலுள்ள ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி நகராட்சி ஆணையா் சுவேதா ஸ்ரீயிடம் மாா்க்சிஸ்ட் கம... மேலும் பார்க்க