செய்திகள் :

பஞ்சாபில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 5 நாள் காவல்

post image

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ஜலந்தர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராமன் அரோரா. ஊழலில் ஈடுபட்டதற்காக கூறி இவரை ஜலந்தர் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இதையடுத்து ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் அரோரா இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க ஊழல் தடுப்புப் பிரிவு சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் தலைமறைவு!

நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சட்டவிரோத அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மிரட்டி பணம் பறித்ததாக ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் வெள்ளிக்கிழமை ஆரோராவின் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் சோதனை நடத்தியிருந்தனர்.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்ட பதிவில், ‘ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ... மேலும் பார்க்க

இணைய மோசடி குற்றவாளி அங்கத் சிங் சந்தோக் நாடு கடத்தல்

இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அங்கத் சிங் சந்தோக், சிபிஐ-யின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு மு... மேலும் பார்க்க

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்ச... மேலும் பார்க்க