செய்திகள் :

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

post image

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடத்தில் இருந்து 400 மாணவர்கள் மற்றும் 40 ஆசிரியர்களை மீட்கும் பணிகளில் இந்திய ராணுவம் உள்ளிட்ட படைகள் ஈடுபட்டு வருகின்றன.

குர்தாஸ்பூர் மாவட்டத்தின், தபூரி எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிக்கூடத்தினுள், 4 முதல் 5 அடிக்கு வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், அப்பள்ளிக்கூடம் மற்றும் அங்குள்ள விடுதியின் தரைதளம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுதியில் தங்கிப்படிக்கும் 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான சுமார் 400 மாணவர்கள் மற்றும் பள்ளி முதல்வர் உள்பட 40 ஆசிரியர்களும், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிப்பதாகத் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவப் படை மற்றும் உள்ளூர்வாசிகளும் இணைந்து படகுகள் மூலம் பள்ளிக்கூடத்தில் சிக்கியுள்ள மாணவர்களையும் ஆசிரியர்களையும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹிமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பஞ்சாபின் பாக்ரா, போங், ரஞ்சித் சாகர் உள்ளிட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டமானது அதிகரித்து வருகின்றது. மேலும், சட்லுஜ், ரவி போன்ற நதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், 100-க்கும் அதிகமான கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பஞ்சாபில் வெள்ளத்தால், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பதான்கோட், குர்தாஸ்பூர், ஃபஸில்கா, அமிர்தசரஸ், ஹோஷியார்பூர் மற்றும் ஜலந்தர் ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படிக்க: மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

Forces, including the Indian Army, are working to rescue 400 students and 40 teachers from a flooded school in Punjab.

நீதிபதி தலையீடு: கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாய உறுப்பினா் புகாரை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) நீதித் துறை உறுப்பினா் சரத்குமாா் சா்மா, ஒரு வழக்கில் ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிட மிக மூத்த நீதிபதி ஒருவா் தன்னை அணுகியதாகக் குற்ற... மேலும் பார்க்க

மாடுகளை வெட்டுவது அமைதியை சீா்குலைக்கும்: பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம்

‘இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும்’ என்று பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஹரிய... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவா் உயிரிழப்பு

ராஜஸ்தானின் சித்தோா்கா் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவா் உயிரிழந்தனா். இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் மனீஷ் திரிபாதி க... மேலும் பார்க்க

தெருவோர கடைக்காரா்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தெருவோர கடைக்காரா்களுக்கான பிரதமரின் கடன் தீட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயா்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய ... மேலும் பார்க்க

50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீா்வு: மத்திய அரசு நம்பிக்கை

‘அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சப்படத் தேவையில்லை’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. மேலும், ‘இந்... மேலும் பார்க்க

‘இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது’

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்த பேச... மேலும் பார்க்க