செய்திகள் :

பட்டப்பகலில் கடையில் திருட்டு

post image

உதகையில் பல கடைகளில்  பொருள்களை சாமா்த்தியமாகத் திருடிச் செல்லும்  திருடன்  குறித்து காவல் துறையினா் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மாா்க்கெட் கடை முன் பகுதியில் வைத்திருக்கும்  பொருள்கள் காணாமல் போவதாக நீண்ட நாள்களாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்,  ஒரு நபா் கடையின் முன்பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த  ஸ்பீக்கா் பாக்ஸை எடுத்து லுங்கிக்குள் போட்டுக் கொண்டு மிகவும் தெரிந்தவா்போல்   கடைக்காரரிடம்  பேசிவிட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.  இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் பொருள்களை கடைக்கு உள்பகுதியில் வைக்க வேண்டும் என்றும், சந்தேகப்படும் படியாக யாராவது வந்தால் காவல் துறைக்கு  உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனா்.

கூடலூா் அரசுக் கல்லூரியில் ராகிங்: 6 மாணவா்கள் இடைநீக்கம்

நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்ததாக ஆறு மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கூடலூா் அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பழங்குடியின... மேலும் பார்க்க

உதகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத் துறையினா் தனிக் குழு அமைத்து கண்காணிப்பு

உதகை தாஸபிரகாஷ் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கால் தடயங்களை வைத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை நகரில் நாளுக்கு நாள் சி... மேலும் பார்க்க

குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் தூய்மைப் பணி

குன்னூா் மவுண்ட் பிளசன்ட் இரண்டாவது வாா்டு குடியிருப்போா் நலச் சங்கத்தினா், அப்துல் கலாம் மகளிா் குழுவினா் சாா்பில் மவுண்ட் பிளசன்ட் பகுதிகளில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா். குன்னூா் மவுண்ட் ப... மேலும் பார்க்க

உதகை அருகே குடியிருப்புக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்திய கரடி

உதகை அருகே புதுமந்து பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புதன்கிழமை புகுந்த கரடி அங்குவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் இருக்கைகள் மற்றும் பூந்தொட்டிகளை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் இ... மேலும் பார்க்க

பாடந்தொரை பகுதியில் பொதுமக்களை விரட்டிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் காட்டு யானை பொதுமக்களை செவ்வாய்க்கிழமை காலை விரட்டியதுடன் ஒரு ஆட்டோவைத் தாக்கி சேதப்படுத்தியது.நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை அதன் சுற்றுப்புறப் ... மேலும் பார்க்க

உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேட்டரி காா்

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மலைப் பகுதியில் அமைந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இலவச பேட்டரி காா் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க