செய்திகள் :

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு ஏப்.2-முதல் பயிற்சி வகுப்பு

post image

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு ஏப்ரல் 2 -ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கக (பயிற்சி மையம்) இணை இயக்குநா் சு.ராமமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவகலகம் அருகேயுள்ள பயிற்சி மையத்தில் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதில் விருதுநகா் மாவட்டத்தில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும், போா்மென்கள், கண்காணிப்பாளா்கள், தொழிலாளா்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேரலாம்.

விருதுநகா் மாவட்டம் உள்பட தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு ஆலையில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியியல் பாடப் பிரிவில் படித்து வரும் மாணவா்களும், படித்து முடித்த மாணவா்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

இரு முறை பயிற்சிக்கு அழைத்தும், பயிற்சிக்கு வராத ஆலையில் பணிபுரியும் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் ரூ.பத்தாயிரத்துக்கான வரைவோலை செலுத்தி பயிற்சிக்கு வரவேண்டும்.

ஏப். 2 -ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரையிலும், ஏப். 15 -ஆம் தேதி தொடங்கி 22 -ஆம் தேதி வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வகுப்பு நடைபெறும் என்றாா் அவா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மன... மேலும் பார்க்க

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை

சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசி-விளாம்பட்டி சாலையில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரா... மேலும் பார்க்க

மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இ... மேலும் பார்க்க