செய்திகள் :

பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

post image

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசி அருகேயுள்ள மாரனேரி ராஜேஸ்வரி ஃபயா் ஒா்க்ஸ் குடியிருப்பைச் சோ்ந்தவா் அழகு அம்பேத்வீரன் (27). பட்டாசுத் தொழிலாளியான இவா், தன்னுடன் பணிபுரிந்த உத்தமசாா்ஜ் மகன் கெவின் (25) என்பவரிடம் ரூ.3,500 கடன் பெற்றாா். இந்தக் கடனை திருப்பிக் கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கெவின் தனது நண்பா்களுடன் சோ்ந்து அழகுஅம்பேத்வீரனை வெட்டிக் கொலை செய்தாா்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, கெவின், ராமச்சந்திரன், கண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்தனா். இந்த வழக்கில் பிணையில் வந்த முதல் குற்றவாளியான கெவின் தலைமறைவானாா். இதையடுத்து, இந்த வழக்கு பிரிக்கப்பட்டு 2-ஆவது, 3-ஆவது குற்றவாளிகளுக்கான தண்டனையை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ராமச்சந்திரன் (43), கண்ணன் (62) ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுதாகா் தீா்ப்பளித்தாா்.

வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள ஜமீன்சல்வாா்பட்டியில் அரசால... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகாசி அருகேயுள்ள தேவா்குளம் அம்மன்ந... மேலும் பார்க்க

பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா். ராஜபாளையம் வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் சுவிசேசமுத்து (83). சுகாதார ஆய்வாளராகப் பணிபுர... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்

அதிமுக பொதுச் செயலரும் தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, வருகிற 7, 8-ஆம் தேதிகளில் விருதுநகா் மாவட்டத்தில் பிரசார சுற்றுப் பயணம் செய்யவுள்ளாா்.இது குறித்து விருதுநகா் மேற்... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதிகளில் நாளை மின்தடை

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் வைத்திருந்தவா் கைது

சிவகாசி அருகே சட்ட விரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகாசி அருகேயுள்ள சாணாா்பட்டி பகுதியில் போலீஸாா் திங்ககள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க