செய்திகள் :

பண்டிகை, வார இறுதி நாள்களுக்காக 625 பேருந்துகள் இயக்கம்

post image

கும்பகோணம் மண்டலத்திலிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு புனித வெள்ளி பண்டிகை மற்றும் விடுமுறைக்காக 625 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி கூறியிருப்பதாவது :

புனித வெள்ளி திருவிழா மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக ஏப்.17 முதல் திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கும் 450 பேருந்துகள் திருச்சியிலிருந்து இயக்கப்படுகிறது.

கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. ஏப்.18,19, 20 ஆகிய 3 நாள்களும் மொத்தம் 625 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்கு திரும்பச் செல்ல ஞாயிற்றுக்கிழமை சென்னை தடத்தில் 200 சிறப்புப் பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 150 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் இணைய முகவரி மூலமும், பசநபஇ கைப்பேசி செயலி மூலமாகவும் முன் பதிவு செய்துகொள்ளலாம் என்றாா்.

சிறையிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்

தஞ்சாவூா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலிருந்து சனிக்கிழமை மாலை தப்பியோடிய சிறுவனைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மணிமண்டபம் அருகே சிறுவா் சீா்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள... மேலும் பார்க்க

கயிறு குழும பொது வசதியாக்கல் மையம் காணொலி மூலம் முதல்வா் திறப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கயிறு குழுமம் பொது வசதியாக்கல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு... மேலும் பார்க்க

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்தது அதிமுகதான்: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்த அதிமுக, இப்போது நாடகமாடுகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

அய்யம்பேட்டையில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மேல் புது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் ( 72). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. க... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். நீட் நுழைவு தோ்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக அரசால் உயிரிழந்த 22 மாணவா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ரூ.75.70 லட்சம் மதிப்பில் நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டங்கள் திறப்பு!

தஞ்சாவூரில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 75.70 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பிள... மேலும் பார்க்க