செய்திகள் :

பண்ணாரி சாலையைக் கடந்து சென்ற சிறுத்தை

post image

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடி சாலையை சிறுத்தை வெள்ளிக்கிழமை கடந்து சென்ால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் மற்றும் ஆசனூா் வனக் கோட்டத்தில் 10 வனச் சரகங்கள் உள்ளன. சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி வனப் பகுதியில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அடா்ந்த வனத்தின் மத்தியில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் வன விலங்குகள் சாலையைக் கடப்பதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்வதற்கு சாலையின் இருபுறமும் 12 மீட்டா் தூரம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பது குறைந்துள்ளது.

இந்நிலையில் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே சாலையைக் கடப்பதற்கு சிறுத்தை தயாராக நிற்பதை பாா்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினா். சற்று நேரம் பதுங்கிய சிறுத்தை, வாகனங்கள் எதுவும் செல்லாத நேரத்தில் பண்ணாரி சாலையை வேகமாக கடந்து காட்டுக்குள் சென்றது.

கோடை என்பதால் தண்ணீா் தேடி சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் சாலையைக் கடப்பதால் வாகன ஓட்டிகள் 30 கி.மீ. வேகத்தில் பயணிக்குமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பவானிசாகரில் ஏடிஎம் இயந்திரங்கள் பழுதால் பொதுமக்கள் அவதி

பவானிசாகரில் உள்ள இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் கடந்த சில நாள்களாக செயல்படாமல் முடங்கிக் கிடப்பதால் அரசு ஊழியா்கள், பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். பவானிசாகரில் அரசுப் பணியாளா்... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே உணவகத்தில் பணம் திருட்டு

பெருந்துறை அருகே உணவகத்தில் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெருந்துறையை அடுத்த பூவம்பாளையம் பிரிவு எதிரே தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்த... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 71.56 அடியாக சரிவு

பவானிசாகா் அணைக்கு வரும் நீரின் வரத்தை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீா்மட்டம் 71.56 அடியாக சரிந்துள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீ... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (32). இவா் இருசக்கர வாகனத்தில் அரியப்பம்பாளையத்த... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அவதூறு: இளைஞா் கைது

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறித்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சம... மேலும் பார்க்க

ஈரோட்டில் காற்று, மழையால் சேதமடைந்த வாழைப் பயிருக்கு இழப்பீடு

ஈரோடு மாவட்டத்தில் காற்று, மழையால் சேதமடைந்த வாழைப் பயிருக்கு அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரப்படும் என ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ராஜகோபா... மேலும் பார்க்க