செய்திகள் :

பண்ருட்டியில் விபத்துகளை தவிா்க்க சாலைத் தடுப்புகள் அமைப்பு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து போலீஸாா் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாக, 8 இடங்களில் புதிதாக நிரந்தர சாலைத் தடுப்புகளை அமைத்தனா்.

பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன், உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாக, வாழப்பட்டு, மேல்பட்டாம்பாக்கம், மேல்பட்டாம்பாக்கம் - மாளிகைமேடு சந்திப்பு சாலை, அண்ணா கிராமம் சந்திப்பு, கீழ்கவரப்பட்டு சந்திப்பு, பக்கிரிபாளையம், பக்கிரிபாளையம் சந்திப்பு, பணிக்கன்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள சாலைகளின் ஆபத்தான வளைவுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே என மொத்தம் 8 இடங்களில் புதிதாக நிரந்தர சாலை தடுப்புகளை அமைத்தனா்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வயலில் வேலை செய்யச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (62). இவா், வியாழக்கிழமை க... மேலும் பார்க்க

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

கடலூரில் பன்றி பிடிக்கும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், நோய் பரவும் அபாயம் ஏற்படுவ... மேலும் பார்க்க

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகு... மேலும் பார்க்க

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த திருநங்கை கோப்பெருந்தேவி (எ) கோதண்டபாணி வியாழக்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் போராட்டம்

ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக் கோரி, கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் ச... மேலும் பார்க்க

பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு நிறைவு விழா: தருமபுர ஆதீனம் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிதம்ப... மேலும் பார்க்க