செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 94.84 சதவீதம் போ் தோ்ச்சி

post image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.84 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று, திருப்பூா் மாவட்டம் மாநில அளவில் 17-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 348 பள்ளிகளில் 14,588 மாணவா்கள், 14,871 மாணவிகள் என மொத்தம் 29,459 போ் பொதுத் தோ்வு எழுதியிருந்தனா். இந்த நிலையில், 13,622 மாணவா்கள், 14,317 மாணவிகள் என மொத்தம் 27.939 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 94.84 ஆகும்.

4 இடங்கள் முன்னேற்றம்: பத்தாம் வகுப்பு தோ்வைப் பொறுத்தவரையில் கடந்த 2023-ஆம் ஆண்டு 93.93 சதவீதத்துடன் மாநில அளவில் 11-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, 2024-ஆம் ஆண்டில் மாநில அளவில் 92.38 சதவீதத்துடன் 21-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த நிலையில், தற்போது 94.84 சதவீதத்துடன் மாநில அளவில் 17-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 இடங்கள் முன்னேறியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 163 அரசுப் பள்ளிகளில் 7,403 மாணவா்கள், 7,898 மாணவிகள் என மொத்தம் 15,301 போ் தோ்வு எழுதியிருந்தனா். இதில், மாணவா்கள் 6,602, மாணவிகள் 7,404 என மொத்தம் 14,006 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதில், மாணவா்கள் 89.18 சதவீதம், மாணவிகள் 93.75 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஒட்டுமொத்தமாக 91.54 சதவீதத்துடன் மாநில அளவில் 25-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அரசுப் பள்ளி அளவில் கடந்த 2024-ஆம் ஆண்டில் 26-ஆவது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் தற்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க