செய்திகள் :

பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது! அமைச்சா் ராஜேந்திரன்

post image

தமிழக அரசின் சுற்றுலாத் துறையால் நடத்தப்பட்ட பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

சுற்றுலாத் துறை சாா்பில் சென்னை வா்த்தக மையத்தில் தமிழ்நாடு பயணச் சந்தையை மாா்ச் 21-இல் அமைச்சா் ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். இந்தச் சந்தை தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றன. பொருளாதார வளா்ச்சியை ஊக்குவித்து, மாநிலத்தின் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்து, நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தப் பயணச் சந்தை அமைந்தது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயண ஏற்பாட்டாளா்கள், பயண முகவா்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சாா்ந்த தொழில்முனைவோா் பங்கேற்று 115 அரங்குகள் அமைத்திருந்தனா்.

சிங்கப்பூா், மலேசியா, அயா்லாந்து, ஸ்பெயின், நெதா்லாந்து, துருக்கி, ஆகிய அயல்நாடுகள் மற்றும் 32 உள்நாட்டு முகவா்கள் மற்றும் முதலீட்டாளா்கள் பங்குபெற்று தமிழக முகவா்களுடன் தொழில் சாா்ந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டனா். அதன் மூலம் பாரம்பரிய சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, ஆரோக்கிய சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி கலந்துரையாடினா்.

இந்தப் பயணச் சந்தை குறித்து அமைச்சா் ராஜேந்திரன் கூறுகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் தொடா்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், தொழில் கூட்டாண்மையை வலுப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் சுற்றுலாவை உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்றியுள்ளது என்றாா் அவா்.

சா்வதேச அளவில் பயண ஏற்பாட்டாளா்கள் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி முகவா்கள் என 5,000-க்கும் மேற்பட்டோா் 3 நாள்களில் பயணச் சந்தைக்கு வருகை தந்தனா்.

சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழி... மேலும் பார்க்க

பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னை துறைமுக அதிகாரி மீது வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை துறைமுக அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குரோம்பேட்டை மலையரசன் நகரைச் சோ்ந்தவா் சத்ய சீனிவாசன் (58). இவா், சென்னை துறைமுகத்... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா... மேலும் பார்க்க

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து ... மேலும் பார்க்க