செய்திகள் :

``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அரசு தகவல்!

post image

நேற்றைய இரவு பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் தீவிரமான துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், இன்றைய நிலவரம் மற்றும் தயாரிப்புகள் குறித்து விளக்க இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இந்திய ராணுவம் தெரிவித்திருப்பதன்படி, வியாழன் இரவு மற்றும் வெள்ளி காலையில், ஜம்மு, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய இராணுவம் பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை முறியடித்ததுடன், அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

சோபியா குரேஷி
சோபியா குரேஷி

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை சார்பில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கலந்துகொண்டார். ராணுவம் சார்பாக சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் கலந்துகொண்டனர்.

சோபியா குரேஷி பேசுகையில், "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியாவின் ராணுவ நிலைகள் மீது நேற்று பாகிஸ்தான், துருக்கியின் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்தியா அவற்றை வழிமறித்து அழித்தது.

பாகிஸ்தான் நேற்றைய தினம் அதன் வான் வழித்தடத்தை மூடவில்லை. பயணிகள் விமானங்களை அனுமதித்த அதே வேலையில் துருக்கிய ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின.

பாகிஸ்தான்தான் பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயன்றது. நேற்று இரவில் இந்திய ராணுவ தளங்களை தாக்க முயன்றதில், சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களை ஆராய்ந்து வருகிறோம்." எனக் கூறியுள்ளார்.

Doctor Vikatan: வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபயோகிக்கலாமா, பவுடர் போடலாமா.. எது சரி?

Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே அதிகம் வியர்க்கும். கோடைக்காலத்தில் இன்னும் அதிகம் வியர்க்கும். இதனால் எப்போதும் என் உடலில் வியர்வை வாடை வந்துகொண்டே இருக்கும். வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபய... மேலும் பார்க்க

இறுக்கமற்ற பிரா முதல் பாக்ஸர் ஷார்ட்ஸ் வரை.. உள்ளாடை டிப்ஸ்!

அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும், விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என மேலாடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளுக்கு பலரும் கொடுப்பது இல்லை. கிழிந்துபோன, பழைய, இறுக்கமான உள்ளாடைகள் அணிந... மேலும் பார்க்க

``நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், நேற்று இரு நாடுகளுக்கிடையே தாக்குல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான 3 மணி ... மேலும் பார்க்க

Kidney Stone: கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

சிறுநீரகக் கற்கள் உருவாக காரணங்கள்; எப்படிக் கண்டறிவது; சிறுநீரகக் கற்கள் தடுக்க, தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார், சிறுநீரகவியல் நிபுணர் என்.ஆனந்தன். சிறுநீரகக் கல்சிறுநீரகக் கற்கள் உருவாக ... மேலும் பார்க்க

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந... மேலும் பார்க்க

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராண... மேலும் பார்க்க