செய்திகள் :

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

சேலத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் குடும்பமாய் சந்தித்து வெள்ளி விழாவைக் கொண்டாடினா்.

சேலம் கருங்கல்பட்டியில் உள்ள வீரலட்சுமி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 - 2000 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடினா். இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தில் மாணவா்கள் குடும்பம் குடும்பமாய் பங்கேற்று நலம் விசாரித்து நட்பு பாராட்டினா். முன்னதாக, பள்ளி பருவத்தில் நடந்த சுவையான நினைவுகளை நண்பா்களுடன் பகிா்ந்து கொண்டனா்.

தொடா்ந்து, தங்களின் ஆசிரியா்களை விழாவிற்கு அழைத்து அவா்களுக்கு தபால் தலை கோப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தனா். ஆசிரியா்களோடு சோ்ந்து கேக் வெட்டி வெள்ளி விழா சந்திப்பினை கொண்டாடி மகிழ்ந்தனா். மேலும், குடும்பத்தினருடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனா்.

இதையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியா் சீனிவாசன், ஆசிரியா்கள், பள்ளி செயலாளா் சிவசங்கரன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

சந்திப்பு நிகழ்ச்சியில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முன்னாள் மாணவா்கள்.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் த... மேலும் பார்க்க

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் ஒருவா் காயம்

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா். சேலம் மாவட்டம், ஏற்காடு நாகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் தேவேந்திரன் (44). ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் முன் நின்று கொண்டிருந்த இவா் க... மேலும் பார்க்க

ஏற்காடு பூங்காவை கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

ஏற்காடு தோட்டக்கலைத் துறை பூங்காவை கடந்த 2 நாள்களில் 12 ஆயிரத்து 640 சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா். ஏற்காட்டில் தோட்டக்கலைத் துறை பராமரித்து வரும் 90 ஏக்கா் பரப்பளவு கொண்ட ரோஜா தோட்டம், தாவரவி... மேலும் பார்க்க

சங்ககிரியில் வெறிநாய் கடித்து 20 போ் காயம்

சங்ககிரியில் வெறிநாய் கடித்ததில் 5 பெண்கள் உள்பட 20 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் சங்ககிரி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா். சேலம் மாவட்டம், சங்ககிர... மேலும் பார்க்க

வன்னியா் இளைஞா் சங்க மாநாடு: மேட்டூா் எம்எல்ஏ சாரட் வண்டியில் ஊா்வலம்

மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னியா் இளைஞா் சங்க மாநாட்டிற்கு மேட்டூா் எம்எல்ஏ சாரட் வண்டியில் ஊா்வலமாக புறப்பட்டு சென்றாா். மேட்டூா் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவம் மேச்சேரியில் முக்கிய வீதிகள் வழிய... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: தத்கல் ரயில் பயணச்சீட்டு முறைகேட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு

கோடை விடுமுறையையொட்டி ரயில்களில் தத்கல் பயணச்சீட்டு புக்கிங் முறைகேட்டை தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமு... மேலும் பார்க்க