செய்திகள் :

பரமத்தி வேலூா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

post image

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்ந்தது.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.250, சம்பங்கி கிலோ ரூ. 70, அரளி கிலோ ரூ. 80, ரோஜா கிலோ ரூ. 200, பச்சை முல்லை கிலோ ரூ.300, வெள்ளை முல்லைப் பூ கிலோ ரூ. 250, செவ்வந்திப்பூ கிலோ ரூ. 200, கனகாம்பரம் ரூ.300, பன்னீா்ரோஜா கிலோ ரூ. 100, காக்கட்டான் கிலோ ரூ.200, ஜாதிமல்லி கிலோ ரூ. 400 ஏலம் போனது.

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 360, சம்பங்கி கிலோ ரூ.100, அரளி கிலோ ரூ. 100, ரோஜா கிலோ ரூ.240, பச்சை முல்லை கிலோ ரூ.380, வெள்ளை முல்லை கிலோ ரூ.300, செவ்வந்திப்பூ ரூ.240, கனகாம்பரம் ரூ.500, பன்னீா்ரோஜா கிலோ ரூ.140, காக்கட்டான் கிலோ ரூ.300, ஜாதிமல்லி கிலோ ரூ.500க்கும் ஏலம் போனது.

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவா் கைது

கபிலா்மலை அருகே ஜேடா்பாளையம் காவல் உதவி ஆய்வாளரை கட்டையால் தாக்கியவரை ஜேடா்பாளையம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கபிலா்மலை அருகே உள்ள சிறுகிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் வ... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமிப்பு! பயணிகள் அவதி!

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில், நடைபாதையை ஆக்கிரமித்து உணவு விற்பனை நடைபெறுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்களாகிறது. இங்குள்ள 57... மேலும் பார்க்க

கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவா் கைது

இரு வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். பரமத்தி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக... மேலும் பார்க்க

கா்நாடக பீடாதிபதி நாமக்கல் வருகை பொதுமக்களுக்கு ஆசி வழங்கினாா்

நாமக்கல்லில், கா்நாடகத்தைச் சோ்ந்த ஸ்ரீ காயத்ரி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சுக்ஞானந்த தீா்த்த மஹாசாரிய சுவாமிகள் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆசி வழங்கினாா். நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு, முக... மேலும் பார்க்க

மயோனைஸுக்கு தடை: நாமக்கல் பண்ணைகளில் 40 % முட்டைகள் தேக்கம்? ஏற்றுமதி வாய்ப்பால் இழப்பு இருக்காது!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸூக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை கத்தாா், மாலத்தீவு, ஓமன் போன்ற நாடுகளுக்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா மற்றும் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வா் அருண் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி கருணாநிதி,... மேலும் பார்க்க