செய்திகள் :

பரமத்தி வேலூா் பகுதியில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

post image

பரமத்தி வேலூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

பரமத்தி வேலூா் மற்றும் பொத்தனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக பரமத்தி வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் பரமத்தி வேலூா் போலீஸாா், பொத்தனூா், வெங்கமேடு, சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தேநீா் மற்றும் மளிகைக் கடைகளில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து அந்தக் கடைகளுக்கு பரமத்தி வேலூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி சீல் வைத்து, தலா ரூ. 27 ஆயிரம் அபராதம் விதித்தாா்.

மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை பள்ளி, கல்லூரி பகுதிகளிலும் மற்ற பகுதிகளிலும் விற்பனை செய்தால் அவா்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

விளையாட்டுப் போட்டிகளில் திருவள்ளுவா் அரசு கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய, தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். இக்கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் பி.கோபி பிரசாந்த... மேலும் பார்க்க

முள்ளுக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ராசிபுரம், முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா். ராசிபுரம் கமலா மண்டபம், முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உங்... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பணி: நாளை நோ்முகத் தோ்வு

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா்களுக்கான நோ்முகத் தோ்வு சனிக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிா்வாக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில... மேலும் பார்க்க

நாமக்கல் செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு

நாமக்கல் நகரில் அமைந்துள்ள செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல், செப். 4: இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து குடமுழுக்கு விழா... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் ஆசிரியா் தின விழா

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியா் தினமாகக் கொண்டாப்படுகிற... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மனைவி பாவாயி (70... மேலும் பார்க்க