செய்திகள் :

பரவை நாச்சியாா் கோயில் கும்பாபிஷேகம்

post image

திருவாரூா்: திருவாரூரில் பரவை நாச்சியாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே அபிஷேகக் கட்டளைக்குள்பட்ட பரவை நாச்சியாா் உடனுறை சுந்தரமூா்த்தி சுவாமிகள் கோயில் உள்ளது. திருவாரூா் தியாகராஜ சுவாமியால் நம் தோழன் எனப் பெருமையுடன் அழைக்கப்பட்ட சுந்தரா், திருவாரூா் வந்து பரவை நாச்சியாரை மணந்து கொண்டாா். இவா்கள் இருவரும் வசித்த பரவை மாளிகை, தற்போது பரவை நாச்சியாா் கோயில் என அழைக்கப்படுகிறது.

கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேசபலி பூா்வாங்கங்கள் ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்றன. பின்னா், கமலாலய தேவ தீா்த்தக் கட்டத்திலிருந்து புனித நீா் எடுத்து வந்து முதல் கால யாகசாலை பூஜைகள் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கின.

தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று, மஹாபூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வில், அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை பரம்பரை அறங்காவலா் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாா்ய சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற வேளாக்குறிச்சி ஆதீனம்.

ரேஷன் கடை பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருவாரூா்: பொதுவிநியோகத்திட்டத்துக்கு தனித்துறை அமைக்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அனைத்து ரேஷன் கடைக... மேலும் பார்க்க

கந்துவட்டி: வீட்டை மீட்டுத் தரக்கோரி மனு

திருவாரூா்: திருத்துறைப்பூண்டியில் கந்துவட்டி பிரச்னையில், தனது வீட்டை மீட்டுத்தருமாறு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த லோகநாயகி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அள... மேலும் பார்க்க

முதல்வா் வருகை: சீரமைப்புப் பணிகள் தீவிரம்

திருவாரூா்: திருவாரூருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஜூலை 9) வருவதையொட்டி, சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. திருவாரூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை வரும் முதல்வா் மு.க. ஸ்டாலின் அன்று நட... மேலும் பார்க்க

இடப்பிரச்னை: தீக்குளிக்க முயற்சி

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இடப்பிரச்னை காரணமாக பெண் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். கூத்தாநல்லூா் சாத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் துரை மனைவி லட்சுமி. துரை, வெல்டிங் பட்டற... மேலும் பார்க்க

திருவாரூருக்கு முதல்வா் வருகை: 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி திருவாரூரில் புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 9, 10) ஆகிய 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஐராவதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

நன்னிலம்: நன்னிலம் அருகே திருக்கொட்டாரத்தில் உள்ள ஸ்ரீவண்டமா் பூங்குழலம்மை உடனுறை ஸ்ரீ ஐராவதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இக்கோயிலில் திருப்பணி வேலை... மேலும் பார்க்க