செய்திகள் :

பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

post image

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியாகினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ் (22), திவாகரன் (24),குமரேசன் (36), கன்னியப்பன் (70),பாலகிருஷ்ணன் (52), சேகர் (44),ஜனா (22) ஆகிய ஏழு பேரும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு ஒரு காரில் , புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன பர்கூர் அருகே சென்று கொண்டிருந்தபோது,ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் உள்ள தடுப்பு சுவர், மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சேகர், ஜனா ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த ஐந்து பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் 7-வது வெற்றி!

ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 236 ரன்கள் எடுக்க, லக்... மேலும் பார்க்க

மாவோயிஸ்டுகள் சரணடைவதுதான் ஒரே வழி: பண்டி சஞ்சய் குமாா்

ஹைதராபாத்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்புடன் அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் க... மேலும் பார்க்க

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ப... மேலும் பார்க்க

சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 போ் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த நியாஸ் அகமதுவின் நிலம் போ்ணாம்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மாறிய வானிலையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 15 நாள்களாக கடுமையான வெயில் தாக்கத்தால் ம... மேலும் பார்க்க

மே 7-ல் ரஷியாவுக்குச் செல்கிறார் சீன அதிபர்!

சீன அதிபர் ஸி ஜின்பிங், மே 7 - 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடு... மேலும் பார்க்க