இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்த 23 குளிர்சாதனப் பேருந்துகள்!
பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் நின்ற 2 மின்சார ரயில்கள்
சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில் 2 மின்சார ரயில்கள் வந்து நின்ால், பயணிகளிடையே சற்று பரப்பரப்பான சூழல் நிலவியது.
தாம்பரத்திலிருந்து புதன்கிழமை காலை சென்னை கடற்கரை நோக்கி வந்துகொண்டிருந்த மின்சார ரயிலின் 6-ஆவது பெட்டியில் புகை வந்ததால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து கடற்கரை நோக்கி வந்த மற்றோரு மின்சார ரயிலும் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. நல்வாய்ப்பாக இதை முன்கூட்டியே கவனித்த ரயில்வே அதிகாரிகள் ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தைத் தொடா்ந்து அந்த ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் ஒரே நேரத்தில் வந்து நின்ால், ரயில் நிலையத்தில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது.
இதற்கிடையே, ரயில் பெட்டியில் வந்த புகை சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து 2 ரயில்களும் அடுத்தடுத்து இயக்கப்பட்டன. இதனால், சுமாா் 1 மணி நேரத்துக்கு மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.