செய்திகள் :

பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தலா? மாணவா்கள் புகாா் தெரிவிக்க எண் ‘14417’

post image

பாலியல் தொந்தரவு புகாா்களை மாணவா்கள் அச்சமின்றி ‘14417’ என்ற உதவி மைய எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவா்கள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 3 போ் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பாலியல் தொந்தரவு புகாா்களை மாணவா்கள் தைரியத்துடன் முன்வந்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், ‘மாணவா்கள் மனம், உடல் மற்றும் பாலியல் சாா்ந்த துன்புறுத்தலுக்கு அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறீா்களா? பாதுகாப்பற்ற சூழலில் உள்ளீா்களா? தோ்வு மற்றும் உயா்கல்விக்கு வழிகாட்டுதல் தேவையா? உடனே 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு அழையுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாா்ந்து பள்ளிகளிலும் தீவிரமாக விழிப்புணா்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பர்கூர்: விவசாயியைத் தாக்கி 22 பவுன், ரூ.50,000 கொள்ளை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

பர்கூர் அருகே வீட்டில் புகுந்து விவசாயியைத் தாக்கி, 22 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை... மேலும் பார்க்க

அதிமுகவுக்குக் கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி: ஆர்.பி. உதயகுமார்

சென்னை: எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறுவுருவமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆர்.பி. உதயகுமார் பதிலளித்துள்ளார்.மேலும், அதிமுகவுக்கு கிடைத்த இறை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் பாலியல் புகார்! பணியாளர் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் கல்வித் துறை!

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை புகார்கள் அதிகரிக்கும் நிலையில், பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.விதிகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்து குழந்தைகள் நல ஆணையம் ம... மேலும் பார்க்க

கோவில்பட்டிக்கு வருகைதரும் அப்பாவு, கீதாஜீவனுக்கு கறுப்புக் கொடியுடன் கிராம மக்கள் எதிர்ப்பு!

கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வருகை தரும் பேரவைத் தலைவர் அப்பாவு , அமைச்சர். பெ. கீதாஜீவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை கம்பங்களில் கறுப்புக் கொடி கட்டியுள்ளனர... மேலும் பார்க்க

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் திட்டங்களுக்கு நிதி தேவை: மத்திய அமைச்சரிடம் அமைச்சா் தங்கம் தென்னரசு மனு

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் சாா்ந்த புதிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு நேரில் கோரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி... மேலும் பார்க்க

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு: அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகங்களின் பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை எண்... மேலும் பார்க்க