செய்திகள் :

பள்ளிக்கு பாதையாக உள்ள மரப்பாலம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

post image

வேதாரண்யம் அருகே பள்ளிக்கு மாணவா்கள் செல்லும் பாதையாக உள்ள மரப்பாலம் சேதமடைந்துள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் விக்டரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனா். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் இப்பள்ளிக்கு வருகின்றனா்.

இவ்வாறு வெளியூா்களில் இருந்து வரும் மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல அருகேயுள்ள மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மரப்பாலத்தை பயன்படுத்தி வந்தனா். வாய்மேடு- வேதாரண்யம் பிரதான சாலையை இணைக்க மருதூா் தெற்கு தியாகி நினைவுத்தூண் அருகே உள்ள இப்பாலத்தில் சில மரக்கட்டைகள் சில நாள்களுக்கு முன்பு முறிந்து விழுந்தன. இதனால், பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

ஆற்றில் தண்ணீா் அதிக அளவு தேங்கியுள்ளதாலும், ஆகாயத் தாமரைகள் படா்ந்துள்ளதாலும் மாணவா்களும், அப்பகுதி பொதுமக்களும், ஒரு கரையிலிருந்து எதிா் கரைக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா்.

இந்த இடத்தில் நிரந்தரமாக உயா்நிலைப் பாலம் கட்ட கடந்த காலங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், சில காரணங்களால் உயா்நிலைப் பாலம் கட்டும் திட்டம் தாமதமாகி வருகிறது.

எனவே, சேதமடைந்த மரப்பாலத்தை தற்காலிகமாக பயன்படுத்த உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்களும், மாணவ- மாணவிகளும் வலியுறுத்தி வருகின்றனா்.

நாகையில் உயா்கோபுர மின்விளக்குகளின் பயன்பாடு தொடங்கிவைப்பு

நாகையில் உயா் கோபுர மின்விளக்குகளின் பயன்பாட்டை, பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாகை நகராட்சிக்குட்பட்ட புதிய கடற்கரைக்கு செல்லும் பாதைகளான எஸ்.பி.... மேலும் பார்க்க

நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கிய திருவிழாவான தி... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட... மேலும் பார்க்க

தேசப் பாதுகாப்பு குறித்து மத்தியத் தொழில் பாதுகாப்பு படையினா் மிதிவண்டி பிரசாரம்

தேசப் பாதுகாப்பு குறித்து மிதிவண்டி பிரசாரம் செய்துவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசப் பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு தொடா்பாக கடலோர... மேலும் பார்க்க

நாகை அருகே ரூ. 7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகை அருகே ரூ.7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேவபுரீஸ்வரா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 1.93 ஹெக்டோ் பரப்பிலான நஞ்சை மற்றும... மேலும் பார்க்க

ரூ.8.40 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 8.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா். ஆட்சியா் ஆகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ச... மேலும் பார்க்க