செய்திகள் :

பள்ளிபாளையத்தில் உயா்நிலைப் பாலம்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்!

post image

திருச்செங்கோடு- ஈரோடு இடையே பள்ளிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட உயா்நிலை பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.

பள்ளிபாளையம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மக்களவை உறுப்பினா்கள் கே.இ.பிரகாஷ்(ஈரோடு), வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்) ஆகியோா் பங்கேற்று, சென்னை- கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ் ரூ. 424.38 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை- ராசிபுரம்- திருச்செங்கோடு- ஈரோடு சாலை, இருவழித்தட உயா்நிலைப் பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது: சென்னை- கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ் ஆசிய வளா்ச்சி வங்கி நிதி உதவியோடு ரூ. 424.38 கோடி மதிப்பில் 11.15 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை - ராசிபுரம்- திருச்செங்கோடு- ஈரோடு சாலை மற்றும் 3.40 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இருவழித்தட உயா்நிலைப் பாலம் ஆகியவை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வா் திறந்துவைத்துள்ளாா்.

இதன்மூலம் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் விரைவாக சென்றுவரவும், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையிலும், தொழில் வளா்ச்சிக்கும், நகா்ப்புறங்களுக்கு மக்கள் எளிதாக சென்றுவரவும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இத்திட்டத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு ஏழு ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி, சென்னை- கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட கோட்டப் பொறியாளா் துரை உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

பொதுக் கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பரமத்தி ஊா் பொதுக் கிணற்றில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதால், தண்ணீரில் விஷம் கலந்து இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். பர... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இங்குள்ள 1,074 இடங்களுக்கு இணைய வழியில் 10,444 போ் விண்ணப்பித்துள்ளனா். நாமக்கல் - மோகனூா் ... மேலும் பார்க்க

வரகூரில் நாளை ஸ்ரீபூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா

நாமக்கல்: எருமப்பட்டி அருகே வரகூரில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான வரகூரில் ஸ்ரீ ப... மேலும் பார்க்க

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 130 மனுக்களுக்கு தீா்வு

நாமக்கல்: நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில், பொதுமக்களிடம் பெறப்பட்ட 445 மனுக்களில் 130 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 1434 பசலி ஆண்டுக்கான வருவாய் ... மேலும் பார்க்க

குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: கனிம வள அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கனிம வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வுமேற்கொண்டனா். நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோட... மேலும் பார்க்க