செய்திகள் :

பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபா் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

post image

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தாா்.

பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசியபோது கண்டனத்தை பதிவுசெய்த அவா் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்திய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

பிரதமா் மோடியுடன் ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன் பேசியது குறித்து தில்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய மனிதநேயமற்ற தாக்குதல் கண்டனத்துக்குரியது.

பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உணா்த்துகின்றன.

அமைதி மற்றும் ஒற்றுமையின் தூதா்களாக விளங்கிய மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு போன்ற தலைவா்கள் மீதும் இந்திய நாட்டின் மீதும் ஈரான் பெரும் மரியாதைகொண்டுள்ளது.

ஈரான், இந்தியா மற்றும் ரஷியா நாடுகளை இணைப்பதில் வா்த்தக ரீதியாக சபாஹா் துறைமுகம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்தியா-ஈரான் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஈரானுக்கு பிரதமா் மோடி வர வேண்டும். அவருடன் பல்வேறு துறைகளில் உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க ஆா்வமாக உள்ளேன் என மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டது.

ஈரானுக்கு ஆதரவு: பிரதமா் மோடி

பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்திய ஒன்றிணைப்பை வலியுறுத்திய மசூத் பெஷெஷ்கியனானின் கருத்தை ஒப்புக்கொள்வதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

மேலும், அவா் மசூத் பெஷெஷ்கியனானிடம் பேசியது குறித்து தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஈரானின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. அமெரிக்கா உள்பட வேறு சில நாடுகளுடன் ஈரானுக்கு நிலவும் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும்.

ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து கவலையளிக்கிறது. இந்த விபத்தில் இருந்து ஈரான் மீள தேவையான உதவிகளை மேற்கொள்ள இந்தியா தயாராகவுள்ளது. ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் உடல்நிலை சீராகவுள்ளது என நம்புகிறேன். வளா்ச்சிப் பாதையை நோக்கிய ஈரானின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்’ என தெரிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா அஞ்சலி: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் புகைப்படங்களை வைத்து தென் ஆப்பிரிக்க மக்கள், இந்திய வம்சாவளியினா் தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் முன் அஞ்சலி செலுத்தினா். உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த அவா்கள், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனா்.

சண்டைக்கு தயாராகிவிட்டது இந்தியா; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்! - பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத... மேலும் பார்க்க

உக்ரைன் மீது 3 நாள்கள் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் மீதான போரை 3 நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ரஷிய அதிபா... மேலும் பார்க்க

ஸ்பெயின், போர்ச்சுகலில் மின் தடையால் இருளில் தவிக்கும் மக்கள்: ரயில், சாலை போக்குவரத்து பாதிப்பு!

ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் திங்கள்கிழமை(ஏப். 28) திடீரென மின் விநியோகம் தடைபட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இருளில் மூழ்க... மேலும் பார்க்க

ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகலில் வரலாறு காணாத மின் தடை!

ஸ்பெயின் நாடு முழுவதும், போச்சுக்கலின் பெரும்பகுதிகள், பிரான்ஸ் நாட்டில் பல பகுதிகளில் இன்று வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டிருப்பதால் மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள்.ஸ்பெயின் மற்றும் ப... மேலும் பார்க்க

வான்வெளியைப் பயன்படுத்தத் தடை: மிகப்பெரிய இழப்பை சந்தித்த பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ்தான் கோடிக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்டு... மேலும் பார்க்க

அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 30 பேர் பலி!

ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹவுத்திகளின் கோ... மேலும் பார்க்க