செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ

post image

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக காஷ்மீரில் 14 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது.

இதில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்ல என்றும், பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் காஷ்மீரின் புல்வாமா, ஷோபியான், அனந்த்நாக், அவந்திபோரா, குல்காம் மற்றும் சோபர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

இதில் 8 பேர் லஷ்கர் இ தொய்பா அமைப்புடனும், 3 பேர் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்புடனும், மேலும் 3 பேர் ஹிஸ்புல் முஹாஜிதீன் அமைப்புடனும் தொடர்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 22) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 3 தமிழர்கள் உள்பட 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தாக்குதல் சம்பவம் நடந்த பைசாரான் பள்ளத்தாக்கிலும், பஹல்காம் பகுதியிலும் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு உதவிகரமாக இருந்த உள்ளூர் மக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் 60 பேர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து வருவதாகத் தெரிகிறது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக புலனாய்வுப் பிரிவினர் 14 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர். 20 அல்லது அதற்கு குறைவான வயதுள்ளவர்களே.

இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் என்ஐஏ குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் 12 நாள்களுக்கு நீட்டிப்பு!

தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஏப். 28) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 18 நாள்கள் காவல் இன்றுடன் முடி... மேலும் பார்க்க

புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என்ன?

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸிடமிருந்து ரூ. 64,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று(ஏப். 28) கையெழுத்திட்டது. இரு நா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?

பஹல்காம் தாக்குதல் குறித்து விரைவான விசாரணை மேற்கொள்ள சீனா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் அமைதி தி... மேலும் பார்க்க

ஒம்காரேஸ்வரர் கோயிலிலிருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்ட சிவன் சிலை!

கேதார்நாத் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலிலிருந்து சிவன் சிலை இன்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டது. சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு முடித்து வைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்துவைத்தது.இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை ... மேலும் பார்க்க