வேப்பனப்பள்ளி அருகே குந்தாணி அம்மன் கற்சிலை கண்டெடுப்பு: 11-ஆம் நூற்றாண்டைச் சே...
பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?
பஹல்காம் தாக்குதல் குறித்து விரைவான விசாரணை மேற்கொள்ள சீனா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் அமைதி திரும்ப தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதை சீனா வரவேற்கிறது என்று சீன வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.
இந்த நிலையில், பஹல்காம் விவகாரம் குறித்து சீனா தரப்பில் இன்று(ஏப். 28) வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியிருப்பதாவது: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் அண்டை நாடாக திகழும் சீனா, மேற்கண்ட இரு நாடுகளும் இணைந்து ஒரே திசையில் வேறுபாடுகளைக் களைந்து பேச்சுவார்த்தை வழியாக தீர்வு காண முயல வேண்டுமென்பதையே விரும்புகிறது. இதன்மூலம், அப்பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.