செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

post image

ஜம்மு - காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

அவர்கள் மூவரும், கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ராணுவம் தரப்பில் மூன்று பேரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஜம்மு - காஷ்மீரின் டச்சிகாம் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இரண்டு நாள்களுக்கு முன்னதாக உளவுத்துறை தகவல் அளித்திருந்தது.

இதையடுத்து ஜம்மு - காஷ்மீரின் லிட்வா பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் இந்திய ராணுவத்தின் சின்னர் கார்ப்ஸ் படையுடன் மாநில காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் இணைந்து தேடுதல் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் மீதும் பஹல்காமில் நடத்தியதை போன்று தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர்.

இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா ஏவுகணைகளை வீசி அழித்தது. பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியதால் 4 நாள் சண்டை நீடித்தது.

இதனிடையே, கடந்த மூன்று மாதங்களாக பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

இன்று மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடைபெறவுள்ள நிலையில், மூன்று பயங்கரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

The Indian Army has said that three terrorists have been killed in Jammu and Kashmir.

இதையும் படிக்க : வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: இமாச்சலின் குழந்தையாக அறிவிப்பு

ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் கொலை

பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹாஸிம் மூஸா ஃபெளஜி, ஆபரேஷன் மகாதேவ் பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியி... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பேசாத ராஜ்நாத் சிங்: சு.வெங்கடேசன்

ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றிய கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். பஹ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தோண்டத்தோண்ட கிடைக்கும் ஆயுதங்கள்! பாதுகாப்புப்படை தீவிர சோதனை

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூரசந்த்பூர், கேங்க்போக்பி, பேர்ஸ்வால், டெங்க்நௌபால், சண்டெல் ஆகிய மலைப்பிரதேச மாவட்டங்களில் கடந்த சில ந... மேலும் பார்க்க

ஐபிஎல் கூட்ட நெரிசல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு காவல் ஆணையருக்கு மீண்டும் பணி! கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சாம்பியன் ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகக் கூறவில்லை என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கால இ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை - ஜெய்சங்கர்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு... மேலும் பார்க்க