செய்திகள் :

பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

post image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் நகரங்களில் இருந்து சுமார் 16,000-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் பஞ்சாபில் வெள்ளம் மற்றும் அதன் பாதிப்புகளினால் பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகவும், சுமார் 42 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், சுமார் 4,500 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், 22 லட்சம் மக்கள் மற்றும் 17 லட்சம் கால்நடைகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, பருவமழையின் தீவிரத்தால் பெய்த கனமழையால், நீர்நிலைகள் நிரம்பியும் மற்றும் அணைகள் திறக்கப்பட்டதாலும் பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வர்த்தக ஒப்பந்தம்! இந்தியா - அமெரிக்க அமைச்சர்களின் பேச்சால் குழப்பம்!

The death toll from floods in Pakistan's Punjab province has risen to 78, it has been reported.

சீனா்களுக்கு நாசா தடை

சீனாவைச் சோ்ந்தவா்களை பணியமா்த்துவதற்கு அமெரிக்க விண்வெளித் ஆய்வு நாசா தடை விதித்துள்ளது.இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா்களாக இருந்து, அமெரிக்க விசா வைத்திருந்தாலும் அவா்கள் தங்களத... மேலும் பார்க்க

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை: அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள சொ்ஜியோ கோா்

‘இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை’ என இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்கவுள்ள சொ்ஜியோ கோா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அவா... மேலும் பார்க்க

சார்லி கிர்க் கொலை: உயர் ரக துப்பாக்கி கண்டெடுப்பு! குற்றவாளி கல்லூரி மாணவர் என சந்தேகம்?

அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க்கை கொலை செய்தவர் ஒரு மாணவர் என்று அந்நாட்டு காவல்துறை சந்தேகிக்கிறது.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க்கின் படுக... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு கத்தார் பதிலடியும் மூன்றாம் உலகப் போரும்?

இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, அந்நாட்டு பிரதமர் அப்துல்ரஹ்மான் அல் த... மேலும் பார்க்க

நேபாள இடைக்கால அரசு: சுசீலா கார்க்கிக்கு பெருகும் இளைஞர்களின் ஆதரவு!

நேபாளத்தில் இடைக்கால அரசுக்குத் தலைமையேற்க, அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஜென்-ஸி பிரதிநிதிகள் ஆதரவுத் தெரிவித்து வருகின்றனர். நேபாள நாட்டில், சமூக வலைதளங்கள் மீதான தடை மற்றும்... மேலும் பார்க்க

பிணைக் கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கையை நெதன்யாகு கொன்று விட்டார்: கத்தார் பிரதமர்!

கத்தார் தலைநகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம், ஹமாஸ் சிறைப் பிடித்துள்ள பிணைக் கைதிகளுக்கான நம்பிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொன்றுவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஷேயிக் முஹம்மது பின் ... மேலும் பார்க்க