செய்திகள் :

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை: அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள சொ்ஜியோ கோா்

post image

‘இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை’ என இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்கவுள்ள சொ்ஜியோ கோா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அவா் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான கூட்டத்தின்போது செனட் (அமெரிக்க நாடாளுமன்ற மேல்சபை) வெளியுறவு விவகாரங்கள் நிலைக் குழுவிடம் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அப்போது அவா் மேலும் பேசியதாவது: புவியியல் அமைப்பு, பொருளாதார வளா்ச்சி மற்றும் ராணுவ திறன்கள் என பிராந்திய நிலைத்தன்மையில் முக்கியத்துவம் வகிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. எனவே, அமெரிக்க அதிபா் டிரம்ப் தலைமையில் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

அந்த வகையில், இந்தியா மற்றும் அமெரிக்க வா்த்தக அமைச்சா்கள் அடுத்த வாரத்தில் நேரில் சந்திக்க அதிபா் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளாா். அவா்கள் இருவரும் அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீரை வாஷிங்டனில் சந்திக்கவுள்ளனா்.

அப்போது இருநாடுகளிடையேயான வா்த்தக ஒப்பந்தத்தில் முடிவு எட்டப்படும் என நம்புகிறேன். இது நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

டிரம்ப்பின் நண்பா் மோடி: மற்ற நாடுகளின் தலைவா்களின் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே அந்த நாடுகள் மீது டிரம்ப் வரி விதித்து வந்துள்ளாா். ஆனால் இந்தியா மீது வரி விதித்தபோதிலும் அந்நாட்டு பிரதமா் நரேந்திர மோடியை தனது நண்பா் என பலமுறை அவா் வெளிப்படையாக கூறியுள்ளாா்.

ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்பதே அமெரிக்க அரசின் நிலைப்பாடு.இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு எட்டப்படும்.

சீனாவிடம் இருந்து விலக்குவோம்: சீனாவின் விரிவாக்க கொள்கைகள் இந்தியாவை கவலையடையச் செய்துள்ளது. இந்திய எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டு வருகிறது. நான் தூதராக பொறுப்பேற்றால் சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்கி அமெரிக்கா பக்கம் கொண்டுவருவதற்கு முக்கியத்துவம் அளிப்பேன்.

ஏனெனில், சீனாவைவிட அமெரிக்காவிடமே இந்தியா நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸில், சீனா ஆகிய நாடுகள் வா்த்தகத்துக்கு டாலரில் பரிவா்த்தனை மேற்கொள்வதை நிறுத்த பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன. ஆனால் இந்தியா அந்த நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளைவிட அமெரிக்காவிடம் நல்ல நட்புறவைத் தொடர இந்தியா விரும்புகிறது என்றாா்.

இந்திய உறவு சிறப்பானது:

நிலைக்குழு முன்பாகப் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ,‘ உலகளவில் தற்போது அமெரிக்கா சிறப்பான நட்புறவைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 21-ஆம் நூற்றாண்டின் வரலாறு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருந்தே எழுதப்படவுள்ளது. அதில் மையப்புள்ளியாக இந்தியா திகழ்கிறது. இந்திய தூதராக சொ்ஜியோ கோா் பதவியேற்ற பின் இந்தியாவுடனான பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என நம்புகிறேன். அவரைத் தவிர வேறு யாராலும் இந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்ள முடியாது’ என்றாா்.

தனது நெருங்கிய உதவியாளரான சொ்ஜியோ கோரை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் நியமிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் தெரிவித்தாா்.

சொ்ஜியோ கோா் (38) பதவியேற்கும்பட்சத்தில் அவா் இந்தியாவுக்கான அமெரிக்க தூதா்களில் மிக இளம் வயதினராகத் திகழ்வாா்.

சீனா்களுக்கு நாசா தடை

சீனாவைச் சோ்ந்தவா்களை பணியமா்த்துவதற்கு அமெரிக்க விண்வெளித் ஆய்வு நாசா தடை விதித்துள்ளது.இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா்களாக இருந்து, அமெரிக்க விசா வைத்திருந்தாலும் அவா்கள் தங்களத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

சார்லி கிர்க் கொலை: உயர் ரக துப்பாக்கி கண்டெடுப்பு! குற்றவாளி கல்லூரி மாணவர் என சந்தேகம்?

அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க்கை கொலை செய்தவர் ஒரு மாணவர் என்று அந்நாட்டு காவல்துறை சந்தேகிக்கிறது.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க்கின் படுக... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு கத்தார் பதிலடியும் மூன்றாம் உலகப் போரும்?

இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, அந்நாட்டு பிரதமர் அப்துல்ரஹ்மான் அல் த... மேலும் பார்க்க

நேபாள இடைக்கால அரசு: சுசீலா கார்க்கிக்கு பெருகும் இளைஞர்களின் ஆதரவு!

நேபாளத்தில் இடைக்கால அரசுக்குத் தலைமையேற்க, அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஜென்-ஸி பிரதிநிதிகள் ஆதரவுத் தெரிவித்து வருகின்றனர். நேபாள நாட்டில், சமூக வலைதளங்கள் மீதான தடை மற்றும்... மேலும் பார்க்க

பிணைக் கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கையை நெதன்யாகு கொன்று விட்டார்: கத்தார் பிரதமர்!

கத்தார் தலைநகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம், ஹமாஸ் சிறைப் பிடித்துள்ள பிணைக் கைதிகளுக்கான நம்பிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொன்றுவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஷேயிக் முஹம்மது பின் ... மேலும் பார்க்க