செய்திகள் :

பாக்கியலட்சுமி வெறும் தொடர் அல்ல; பாடம்: நடிகை நேகா நெகிழ்ச்சி

post image

பாக்கியலட்சுமி வெறும் தொடர் மட்டுமல்ல; மறக்க முடியாத நினைவுகளுடன் கூடிய பாடம் என நடிகை நேகா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பாக்கியலட்சுமி தொடருடன் பணியாற்றியுள்ளதாகவும், நடிப்பின் மீதான ஆர்வத்தை உணர்ந்ததும் இந்த படப்பிடிப்பு தளத்தில்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் விரைவில் முடியவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இத்தொடர் குறித்து பல சர்ச்சைகள் மற்றும் பல விமர்சனங்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் எழுந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் அதிக டிஆர்பி பெறும் தொடர்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி தொடர் இருந்து வருகிறது.

இத்தொடரில் நடித்த பலரும் மக்களிடையே மிகுந்த பிரபலமடைந்து, தற்போது திரைப்படங்களிலும் நடிக்கத்தொடங்கியுள்ளனர். இத்தொடரில் பாக்கியலட்சுமிக்கு மகளாக இனியா என்ற பாத்திரத்தில் நடித்து வரும் நேகா, தொடர் முடிவது குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி தொழில்நுட்பக் குழுவினருடன் நேகா

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளதாவது, கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பயணித்துள்ளது பாக்கியலட்சுமி தொடர். இது வெறும் தொடர் மட்டுமல்ல; ஒரு பயணம். இந்த இடம் வீடாக மாறியுள்ளது. இந்த மக்கள் எனது குடும்பமாக மாறியுள்ளனர். படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.

இது எளிமையான விஷயம் அல்ல. மிக நீண்ட இரவு, கடினமான நாள்கள், மறுஒளிப்பதிவு மற்றும் சந்தேகங்கள் என பல. ஆனால், அது மட்டுமல்ல சிரிப்பு, வளர்ச்சி, நடிப்பின் மீது காதல் ஏற்படுத்திய அதிசயம் மற்றும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என பலவற்றை பாக்கியலட்சுமி தொடரில் பெற்றுள்ளேன்.

இன்று இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து இறுதியாக வெளியேறுகிறேன். இந்த தொடரில் இருந்து நான் வெளியேறினாலும், நினைவுகளையும், பாடங்களையும் என்னுடனேயே எடுத்துச்செல்கிறேன்.

சிறுமியாக இந்தத் தொடரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தேன், இப்போது ஒரு பெண்ணாக நான் மாற்றி என்னை அனுப்புகிறாள் பாக்கியலட்சுமி. இந்தக் கதையில் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Actress Neha Lainichi has said that Bhagyalakshmi is not just a serial; it is a lesson with unforgettable memories.

பொதுவுடைமை, திராவிட இயக்கங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் வா்க்க, சமூக விடுதலைக்கான இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என முதல்வா் முக.ஸ்டாலின் தெரிவித்தாா்.நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் சென்னை காமராஜா் அரங்க... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: விவாதம் நடத்த திமுக தயாரா?: அன்புமணி

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக தன்னுடன் விவாதம் நடத்த திமுக தயாரா என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தை அன்புமணி மேற்கொண்டு வருகிறாா். ச... மேலும் பார்க்க

சென்னை ஜெ.ஜெ.நகரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல் கைது

சென்னை: சென்னை ஜெ.ஜெ.நகரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை ஜெ.ஜெ. நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு காளிதாஸ் என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்துக்கு பழி... மேலும் பார்க்க

1,000 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வகை சக்கர நாற்காலி: தமிழக அரசு உத்தரவு

சென்னை: நிகழாண்டில் மாற்றுத்திறனாளிகள் 1,000 பேருக்கு சிறப்பு வகை சக்கர நாற்காலிகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:தசைச்சித... மேலும் பார்க்க

"பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்'

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நிகழ் கல்வியாண்டிலேயே அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.இதுக... மேலும் பார்க்க

நில அபகரிப்பு புகார் வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி: நில அபகரிப்பு புகார் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்னா தாக்கல் செய்த மேல்முறைய... மேலும் பார்க்க