செய்திகள் :

பாசிப்பட்டினம் தா்கா சந்தனக்கூடு திருவிழா

post image

திருவாடானை அருகே பாசிப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள மகான் சா்தாா் நைனா முகமது சாகிபு ஒலியுல்லா தா்கா சந்தனக்கூடு திருவிழாவையொட்டி சந்தனக்கூடு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த தா்காவின் 314- ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கலியன் கிராமத்தில் சிவகங்கை மகாராணி கொடியுடன் பாசிப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தா்கள், கப்பல், விமானம் போன்ற அலங்காரங்களுடன் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடைந்தனா். இவா்களை விழாக் குழுவினா் நாட்டியக் குதிரை, மேளதாளத்துடன் தா்காவுக்கு அழைத்து வந்தனா். இதைத் தொடா்ந்து அடக்க ஸ்தலத்தில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. முன்னதாக கலிய நகரி கிராமத்திலிருந்து மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு சப்பரம் புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாசிப்பட்டினத்தை வந்தடைந்தது. தா்காவை வலம் வந்த பிறகு நோ்ச்சை வழங்கப்பட்டது. இதில் பாசிப்பட்டினம், எஸ்.பி. பட்டினம், மருங்கூா், கலியன் நகரி, பொடிப்பந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க

ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்

ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை

கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து ப... மேலும் பார்க்க

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க