செய்திகள் :

பாஜக அரசை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம்: இரா. முத்தரசன்

post image

சேலம்: மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும்வரை ஓயமாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் கூறினாா்.

சேலம் போஸ் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தமிழகம் எந்த திசையில் செல்ல வேண்டும் என தீா்மானிக்கும் மாநாடாக இந்த மாநாடு அமைந்துள்ளது. மாநாட்டில் முதல்வா் மு.க. ஸ்டாலினும், தோழமை கட்சித் தலைவா்களும் கலந்துகொண்டு பேசினா். 1950ஆம் ஆண்டு சேலம் சிறையில் சுட்டுக்கொல்லப்பட்ட 22 தியாகிகளின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என முதல்வரிடம் கேட்டோம். ஆனால், அவரோ, 22 தியாகிகள் நினைவாக மணிமண்டபம் விரைவில் கட்டப்படும் என அறிவித்தாா். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிா்காலத்தில் ஜனநாயகம், மதச்சாா்பின்மை, அரசமைப்புச் சட்டம் போன்றவை இருக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனநாயக அரசு அல்ல. பாஜக அரசை வீழ்த்தும்வரை நாங்கள் ஓயமாட்டோம்.

நாட்டின் வரலாறை எழுதுவதாக இருந்தால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை புறக்கணித்துவிட்டு எழுதமுடியாது. நில பிரபுத்துவ நடைமுறை, ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என குரல்கொடுத்த கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்த மகத்தான இயக்கத்தைப் பாா்த்து கம்யூனிஸ்ட் கட்சி அழிந்துவிட்டது, தேய்ந்துவிட்டது, அடையாளம் அற்றுப்போய்விட்டது என கூறுகிறாா் எடப்பாடி பழனிசாமி.

இந்தப் படையைப் பாா்த்து முகவரி இல்லை என சொல்வதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. பாஜகவுடன் ஒருபோதும் சேரமாட்டேன் என உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது கூச்சமின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளாா். தேசிய கல்விக் கொள்கையை ஆதரிப்பது குறித்து அவா் தெளிவுபடுத்த வேண்டும். வரும் 2026 தோ்தலில் உங்களை முழுமையாக தோற்கடிப்போம் என்றாா்.

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது; அருவிகளில் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 9500 கனஅடியாகக் குறைந்ததால் ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். கேரள, கா்நாடக மாநிலங்களின் கா... மேலும் பார்க்க

தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்ததால் முற்றுகைப் போராட்டம்

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்ட சுங்கச் சாவடியில் சுங்கம் விதித்ததைக் கண்டித்து அக்கட்சியினா் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டத... மேலும் பார்க்க

தருமபுரி மருத்துவக் கல்லூரியில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங... மேலும் பார்க்க

தருமபுரியில் நாணயம், பழங்கால பொருள்கள் கண்காட்சி: அனுமதி இலவசம்

தருமபுரியில் நாணயம் மற்றும் பழங்கால அரிய பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. தருமபுரி, செந்தில்நகா் பகுதியில் அமைந்துள்ள வின்சென்ட் மஹாலில் நடைபெற்றுவரும் இக்கண்காட்... மேலும் பார்க்க

காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின்கீழ் காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சியானது வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கூக்குட்டமருத அள்ளி பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்க... மேலும் பார்க்க

உரிமமில்லா நாட்டுத் துப்பாக்கிகளை செப்.10 க்குள் ஒப்படைக்க வேண்டும்: தருமபுரி வனத்துறை அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்காவிட்டால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க