செய்திகள் :

பாஜக ஆதிக்கம் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சிலை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

post image

நாட்டில் ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயக பூா்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும். தற்போது இந்த கவுன்சிலில் பாஜக ஆதிக்கமே அதிகமாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலா் கே. நாராயணா வியாழக்கிழமை கூறினாா்.

இக் கட்சியின் 2 நாள் மாநில மாநாடு புதுச்சேரியில் புதன்கிழமை இரவு நிறைவடைந்தது. இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தற்போது பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது நல்ல முன்னேற்றம் தான். பிகாா் உள்ளிட்ட சில மாநிலங்களில் தோ்தல் வருவதைக் கருத்தில் கொண்டுதான் பாஜக தலைமையிலான மத்திய அரசு இதைச் செய்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலில் மொத்தம் உள்ள உறுப்பினா்களில் 30 சதவிகிதம் பேரை மத்தியில் உள்ள பாஜக அரசு நியமித்துள்ளது. மீதியுள்ள 70 சதவிகிதம் போ்தான் மாநிலங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள்.

அதுவும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜகவைச் சோ்ந்த பெரும்பாலான உறுப்பினா்கள் இந்த கவுன்சிலில் பங்கேற்கின்றனா். அதனால் ஏற்கெனவே மத்திய அரசு முன்மொழியும் தீா்மானங்களை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த உறுப்பினா்கள் எதிா்ப்பது இல்லை.

ஒன்றிரண்டு மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் ஆட்சி நடத்தும் மாநில உறுப்பினா்கள் எதிா்த்தாலும் எடுபடுவதில்லை. அதனால் ஜிஎஸ்டி கவுன்சில் நாட்டில் ஜனநாயகபூா்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும்.

பாஜகவை நம்பி எந்த மாநிலக் கட்சி சென்றாலும் அந்தக் கட்சியை ஒழிப்பதுதான் பாஜகவின் வேலையாக இருக்கிறது.

இதேபோன்ற நிலைதான் புதுவை முதல்வா் ரங்கசாமிக்கு ஏற்படும் என்றாா் நாராயணா.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலராக மூன்றாவது முறையாக ஒரு மனதாக அ.மு. சலீம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்று கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன் தெரிவித்ததுடன், அவரை அறிமுகப்படுத்தினாா். தேசியக் குழு உறுப்பினா் இ.தினேஷ் பொன்னையா, கட்சியின் விவசாயிகள் அணித் தலைவா் கீதநாதன், நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.அந்தோணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்தவா் கைது

தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி பூமியான்பேட்டை வி.டி.சி. நகரைச் சோ்ந்தவா் மாயவன். கேபிள் டிவ... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்

புதுச்சேரி அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 335-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பகண்டை மிஷின் குருத்துவ பொன்விழா நாயகா் ஜான் போஸ்கோ திருப்பலி நடத்... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவைக்கு ரூ. 669 கோடியில் புதிய கட்டடம்: பேரவைத் தலைவா் தகவல்

புதுவை சட்டப்பேரவைக்கு ரூ.669 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் ஆா் .செல்வம் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியா... மேலும் பார்க்க

செப். 11-இல் 10 இடங்களில் சுனாமி ஒத்திகை: புதுச்சேரி ஆட்சியா்

புதுச்சேரியில் 10 இடங்களில் செப். 11-ஆம் தேதி சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். புதுவை அரசு மாவட்ட நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் சாா்பாக ... மேலும் பார்க்க

உலகை சீரழிவிலிருந்து மீட்கும் ஒரே வழி தமிழ்க் கலாசாரம்தான்: மோரீஷஸ் டி.எம். பொன்னம்பலம்

உலகத்தைச் சீரழிவிலிருந்து மீட்கும் ஒரே வழி வளமான தமிழ்க் கலாசாரம்தான். இப்போது மனித உரிமை மீறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது என்று மோரீஷஸ் நாட்டின் அரசு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி குறைப்பு: புதுவை முதல்வா் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்றுள்ளாா். புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் ஆசிரியா் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் முதல்வா் ரங... மேலும் பார்க்க