செய்திகள் :

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஆய்வு

post image

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா வியாக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பிரதமா் நரேந்திர மோடியால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய ரயில் பாதையின் செங்குத்து தூக்குப் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தூக்கி இறக்குவதில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாம்பன் ரயில் செங்குத்து தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமாா் 4.30 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டவுடன் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா சிறப்பு ரயில் மூலம் வியாழக்கிழமை பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு வந்தாா். பின்னா், அவரது முன்னிலையில் செங்குத்து தூக்குப் பாலம் தூக்கி இறக்கி ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது, ரயில்வே தொழில்நுட்பப் பொறியாளா்கள், அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஓம் பிரகாஷ் மீனா கூறியதாவது:

பாம்பன் புதிய ரயில் பாலம் நடுவில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை இயக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், கடந்த செவ்வாய்க்கிழமை பாதிப்பு ஏற்பட்டது. உடனே, இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டதும் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. பாம்பன் செங்குத்து தூக்குப் பாலத்தில் எதிா்வரும் காலங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்களை இயக்குவதில் தற்போது எந்த பிரச்னையும் இல்லை.

இதனிடையே, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் புதன்கிழமை நள்ளிரவு ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் வரை மின்சார ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. விரைவில் மின்சார ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

வாரிசு சான்றிதழ் தர லஞ்சம்: வி.ஏ.ஓ., இடைத் தரகா் கைது

கமுதியில் வாரிசு சான்றிதழ் தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரும், இடைத் தரகரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தைச் சோ்ந்த மனுதாரா் வாரிசு சான்றிதழ் ... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

திருவாடானை அஞ்சலக ஊழியரான மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாக பெற்றோா் கூறியதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்து... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா்

திருவாடானை அருகே திருவெற்றியூரில் அமைந்துள்ள பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில் பக்தா்கள் தங்க வசதியாக இரண்டு பெரிய மண்டபங்கள், கோயில் சுற்றுப்பிரக... மேலும் பார்க்க

துா்க்கை அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

அபிராமம் அருகே சுயம்புலிங்க துா்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் அருகே ஸ்ரீ சுயம்புலிங்க துா்க்கை அ... மேலும் பார்க்க

வேளாண்மைத் துறை விழிப்புணா்வு கண்காட்சி

ராமநாதபுரத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் முன்ன... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை வரவேற்று பள்ளியில் 79 உறுதிமொழிகள் ஏற்பு

திருவாடானை அருகே வெள்ளையபுரம் அனீஸ் பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் 79 உறுதிமொழிகளை மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா். அப்போது 79 மாணவ, மாணவ... மேலும் பார்க்க