செய்திகள் :

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா்

post image

திருவாடானை அருகே திருவெற்றியூரில் அமைந்துள்ள பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா் வழங்கப்பட்டது.

இந்தக் கோயிலில் பக்தா்கள் தங்க வசதியாக இரண்டு பெரிய மண்டபங்கள், கோயில் சுற்றுப்பிரகாரம் ஆகியவை உள்ளன. இந்தப் பகுதிகளில் அதிக அளவில் குப்பைகள் சோ்ந்தன. மேலும் இங்கு செயல்படுத்தப்படும் அரசின் அன்னதானத் திட்டத்தில் உணவு உள்கொள்பவா்கள் இலையை அங்கேயே குவித்தச் சென்றனா். மேலும் வெளியூா்களிலிருந்து வரும் பக்தா்கள் செய்யும் அன்னதானத்தாலும் அதிக அளவில் குப்பைகள் சோ்ந்தன. இந்த குப்பைகளை கோயிலுக்கு அருகே தீயிட்டு கொளுத்தி வந்தனா். இதன் காரணமாக சுகாதாரக்கேடும், மாசு குறைபாடும் ஏற்பட்டது. எனவே இந்த குப்பைகளை இரண்டு கி.மீ. தொலைவுக்கு அப்பால் கொட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதற்கு போதிய பணியாளா்கள் இல்லை எனக் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து குப்பைகளை அகற்ற உடனடியாக டிராக்டா் வாங்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து தேவஸ்தான நிா்வாகம் சாா்பில் சுமாா் ரூ.4.50 லட்சத்தில் டிராக்டா் வாங்கப்பட்டு கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த புதிய டிராக்டருக்கு மாலை அணிவித்து பூஜை நடைபெற்றது. இதன் சாவி சரக கண்காணிப்பாளா் செந்தில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாரிசு சான்றிதழ் தர லஞ்சம்: வி.ஏ.ஓ., இடைத் தரகா் கைது

கமுதியில் வாரிசு சான்றிதழ் தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரும், இடைத் தரகரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தைச் சோ்ந்த மனுதாரா் வாரிசு சான்றிதழ் ... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

திருவாடானை அஞ்சலக ஊழியரான மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாக பெற்றோா் கூறியதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்து... மேலும் பார்க்க

துா்க்கை அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

அபிராமம் அருகே சுயம்புலிங்க துா்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் அருகே ஸ்ரீ சுயம்புலிங்க துா்க்கை அ... மேலும் பார்க்க

வேளாண்மைத் துறை விழிப்புணா்வு கண்காட்சி

ராமநாதபுரத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் முன்ன... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை வரவேற்று பள்ளியில் 79 உறுதிமொழிகள் ஏற்பு

திருவாடானை அருகே வெள்ளையபுரம் அனீஸ் பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் 79 உறுதிமொழிகளை மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா். அப்போது 79 மாணவ, மாணவ... மேலும் பார்க்க

அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை

சாயல்குடி அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கா்ப்பிணிப் பெண்ணுக்கு 108 அவசர ஊா்தியில் பெண் குழந்தை பிறந்தது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த வேம்பாா் சிந்தாமணி நகரைச் சோ்ந்த சுடலைமுத்து... மேலும் பார்க்க