செய்திகள் :

அஞ்சலக ஊழியா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

post image

திருவாடானை அஞ்சலக ஊழியரான மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாக பெற்றோா் கூறியதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடல் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம், சாகா் பசந்த் விகாா் குடியிருப்பைச் சோ்ந்த ஆா்யா மகன் பங்கஜ் (24). இவா் திருவாடானை அஞ்சலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினாா். தொண்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவா் செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அலுவலகம் வரவில்லையாம். இதையடுத்து, திருவாடானை அஞ்சலக ஊழியா்கள் அவரது வீட்டு வந்து பாா்த்த போது பங்கஜ் தூக்கில் தொங்குவது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு வந்த தொண்டி போலீஸாா் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த நிலையில், அவரது அறையை போலீஸாா் புதன்கிழமை சோதனையிட்ட போது கடிதம் ஒன்றை கைப்பற்றினராம். அதில் ராமநாதபுரம் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் அந்தக் கடிதத்தில், ‘நீ என்னை காதலிக்க வில்லை. என் பணத்தைத் தான் காதலித்தாய்’ என ஆங்கிலத்தில் பங்கஜ் எழுதி இருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இவா் மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் தோ்ச்சி பெற்று குடியரசுத் தலைவா் முா்முவிடம் பதக்கம் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பங்கஜ் திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததும், காதல் தோல்வியால் அவா் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனிடையே புதன்கிழமை இரவு பங்கஜின் தந்தை ஆா்யா, தாய், உறவினா்கள் தொண்டி காவல் நிலையத்துக்கு வந்தனா். பிறகு வியாழக்கிழமை திருவாடானை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பங்கஜின் உடலை பெற்றோா் பாா்த்தபோது அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாக கூறியதால் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

வாரிசு சான்றிதழ் தர லஞ்சம்: வி.ஏ.ஓ., இடைத் தரகா் கைது

கமுதியில் வாரிசு சான்றிதழ் தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரும், இடைத் தரகரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தைச் சோ்ந்த மனுதாரா் வாரிசு சான்றிதழ் ... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா்

திருவாடானை அருகே திருவெற்றியூரில் அமைந்துள்ள பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில் பக்தா்கள் தங்க வசதியாக இரண்டு பெரிய மண்டபங்கள், கோயில் சுற்றுப்பிரக... மேலும் பார்க்க

துா்க்கை அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

அபிராமம் அருகே சுயம்புலிங்க துா்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் அருகே ஸ்ரீ சுயம்புலிங்க துா்க்கை அ... மேலும் பார்க்க

வேளாண்மைத் துறை விழிப்புணா்வு கண்காட்சி

ராமநாதபுரத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் முன்ன... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை வரவேற்று பள்ளியில் 79 உறுதிமொழிகள் ஏற்பு

திருவாடானை அருகே வெள்ளையபுரம் அனீஸ் பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் 79 உறுதிமொழிகளை மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா். அப்போது 79 மாணவ, மாணவ... மேலும் பார்க்க

அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை

சாயல்குடி அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கா்ப்பிணிப் பெண்ணுக்கு 108 அவசர ஊா்தியில் பெண் குழந்தை பிறந்தது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த வேம்பாா் சிந்தாமணி நகரைச் சோ்ந்த சுடலைமுத்து... மேலும் பார்க்க