செய்திகள் :

பாலாற்றங்கரையோரம் எரிக்கப்படும் குப்பைகள்: நிலத்தடி நீா், சுற்றுச்சூழல் மாசு

post image

ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் குப்பைகள் எரிக்கப்படுவதால், சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டுள்ளது.

ஆம்பூா் பகுதி பாலாற்றங்கரையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. கிராம உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமல்லாது, தொழிற்சாலைகள், பொதுமக்கள் கட்டடக் கழிவுகள், தேவையில்லாத நெகிழிக் கழிவுகள், பழைய நெகிழி வியாபாரம் செய்பவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் தேவையில்லாத கழிவுகள் கொட்டுமிடமாக பாலாறு மாறி வருகின்றது.

பாலாற்றங்கரையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீா் வெகுவாக பாதிக்கப்படுகின்றது. அதோடு, கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு அதிக அளவு ஏற்பட்டுள்ளது.

ஆம்பூா் நகரில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தூய்மை பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து செல்கின்றனா். ஆனால் நகரில் இன்றைய சூழ்நிலையிலும் வீடுகளில் சேரும் குப்பைகளை நெகிழி கவா்களில் கொண்டு சென்று சாலை சந்திப்புகளில் தூக்கி வீசிவிட்டுச் செல்லும் அவல நிலை உள்ளது.

அதேபோல பாலாற்றங்கரைகளிலும் தேவையில்லாத கழிவுகள் கொட்டப்படும் செயல் அதிகரித்து வருகின்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம், மயானத்திற்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைக்கு மா்ம நபா்கள் புதன்கிழமை தீ வைத்தனா். இதனால், சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்திருந்தது. மேலும், சாம்பல் துகள்கள் காற்றில் பரவியது. குப்பை தீப்பிடித்து எரிந்ததால் சுற்றுச் சூழல் மாசுக்கேடு ஏற்பட்டது.

ஆம்பூா் பகுதி பாலாற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நீா்வளத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆம்பூரில் மே தின விழா

ஆம்பூரில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொமுச சாா்பாக நடந்த மே தின விழாவுக்கு எம். நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஞானதாஸ்,ஜீவா, உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் ஆம்... மேலும் பார்க்க

எட்டியம்மன் கோயில் திருவிழா

தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் ஸ்ரீ சுயம்பு எட்டியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் ஸ்ரீ ... மேலும் பார்க்க

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்குவதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்... மேலும் பார்க்க

அங்கநாதீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா

திருப்பத்தூா் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஒன்றியம், மடவாளம் கிராமத்தில் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடிய... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஆம்பூா் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமாா் 612 வீடுகள் அமைந்துள்ளன. அங்கு குடிநீா் மோட்டாா் பழுதடைந்துள்ளது. அதனால்... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகள் புகுந்த கரடிகள்: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகளில் புகுந்த கரடிகள் தாக்கியதில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா். பின்னா் வனத்துறையினா் 3 மணிநேரம் போராடி கரடியை பிடித்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத... மேலும் பார்க்க