செய்திகள் :

பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்த பெண்: போலீஸாா் விசாரணை

post image

தனியாா் நிறுவனத்தில் மனிதவள மேமபாட்டுத் துறையின் தலைவராகப் பணிபுரியும் 42 வயது பெண் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் குருகிராமில் வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை ஃபெரோஸ் காந்தி காலனி அருகே நடந்தது. தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல, ரைடு-ஹெய்லிங் செயலி மூலம் ஆட்டோவை அந்த பெண் முன்பதிவு செய்திருந்தாா். பயணத்தின் போது, மதுபோதையில் இருந்த ஓட்டுநா் அவரது கையைப் பிடித்து, அவரது மடிக்கணினிப் பையைப் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

பீதியில், அந்தப் பெண் ஓடும் வாகனத்திலிருந்து குதித்து காயமடைந்தாா். சம்பவம் நடந்த உடனேயே ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

தப்பியோடியதைத் தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25-க்கும் மேற்பட்ட முறை போன் செய்து ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் சமா்ப்பிக்கப்பட்டது.

நியூ காலனி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ரைடு-ஹெய்லிங் நிறுவனம் ஓட்டுநரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறது. விசாரணையைத் தொடங்கி, ஓட்டுநரின் பின்னணி உள்பட வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகின்றனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி 8 போ் உயிரிழப்பு; 20 போ் காயம்

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக... மேலும் பார்க்க

ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு ‘கண்துடைப்பு’ பயணம்: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் கண்துடைப்பானது; மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, நீதியை உறுதி செய்யும் நோக்கம் இல்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்க... மேலும் பார்க்க

கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?: செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை

‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது. வழக்குரைஞா் சங்க ஒதுக்... மேலும் பார்க்க

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ ... மேலும் பார்க்க