செய்திகள் :

பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை தொடக்கம்: இதுவரை 3.93 லட்சம் பேர் தரிசனம்!

post image

பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மழையைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரை பாதையின் பஹல்காம் அச்சில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது, ஆனால் மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து இடைநிறுத்தப்பட்டது.

ஜம்முவிலிருந்து தெற்கு காஷ்மீர் இமயலையில் உள்ள குகைக் கோயிலுக்கு புதிய குழுவினர் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் பெய்த கனமழையால் சாலைகள் பழுதடைந்த நிலையில், பால்டால் மற்றும் பஹல்காம் வழித்தடங்களில் யாத்திரை புதன்கிழமை நிறுத்தப்பட்டது. இதனிடையே பால்தால் பாதையிலிருந்து இன்று காலை யாத்திரை மீண்டும் தொடங்கியது

ஜூலை 31 அன்று ஜம்முவின் பகவதி நகரிலிருந்து பால்தால் மற்றும் நுன்வானில் உள்ள அடிப்படை முகாம்களை நோக்கி எந்த வாகனப் போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டதாக ஆணையர் ரமேஷ் குமார் கூறினார்.

பஹல்காம், பால்தால் இரட்டை அடிப்படை முகாம்களில் பயணம் செய்வதற்காக பக்தர்கள் பகவதி நகர் அடிப்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிலிருந்து யாத்திரை இடைநிறுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஜூலை 17 அன்று, காஷ்மீரில் உள்ள இரட்டை அடிவார முகாம்களில் பெய்த கனமழை காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டது.

ஜூலை 3 ஆம் தேதி பள்ளத்தாக்கிலிருந்து 38 நாள் யாத்திரை தொடங்கியதிலிருந்து 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலில் உள்ள சிவபெருமானின் பனி லிங்கத்தை இதுவரை 3.93 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.

கடந்தாண்டு 5.10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசித்தனர். ரக்ஷா பந்தன் பண்டிகையான ஆகஸ்ட் 9 ஆம் தேதி யாத்திரை நிறைவடைகின்றது.

The Amarnath Yatra resumed from the Baltal axis in the Kashmir valley on Thursday but was suspended from Jammu due to inclement weather conditions.

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க

பணம் ஈட்டும் விளையாட்டுகள்: சிசிஐயிடம் கூகுள் முன்மொழிவு

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.இதுதவிர, இந்தியாவில் கூகுள் விளம்பர கொள்கையில் மாற்றங்க... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்களின் மதிப்பூதியத்தை உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு

அங்கன்வாடி ஊழியா்களின் மதிப்பூதியத்தை உயா்த்தும் திட்டம் எதுவுமில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.தேசிய ஊட்டச் சத்து (மதிய உணவு திட்டம்) திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க