செய்திகள் :

பால் உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை: ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்

post image

தென்காசி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.

தென்காசி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பது, பால் உற்பத்தி சங்கங்களின் வளா்ச்சியை மேம்படுத்து குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது: தென்காசி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சங்கங்களின் முன்னேற்றத்தை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இம்மாவட்டத்தில் செயல்படும் 73 பிரதான பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 12ஆயிரம் லிட்டா் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு சராசரியாக 7ஆயிரம் லிட்டா் வரை உள்ளுா் விற்பனைக்கும், 6ஆயிரம் லிட்டா் பால் திருநெல்வேலி ஆவினுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும், கொள்முதல் செய்யப்படும் பால் உரிய முறையில் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு நகரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அனைத்து வருவாய் கிராமங்களில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பது, ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் குறைந்தது 200 லிட்டா் பால் கொள்முதல் செய்வது, பாலுக்கான தொகை மற்றும் லிட்டா் ஒன்றுக்கு அரசு வழங்கும் ரூ.3 ஊக்கத்தொகையை பால் உற்பத்தியாளா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக முறையே வாரம் மற்றும் மாதந்தோறும் வரவு செய்வது, கூட்டுறவுச் சங்கங்களின் அனைத்து உற்பத்தியாளா்களின் கால்நடைகளுக்கும் திருநெல்வேலி ஆவின் மூலம் மானியத்தில் மிக குறைந்த செலவில் காப்பீடு, சிறு குறு விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளா்களுக்கும் விவசாய கடன் அட்டைகள் வழங்குதல், கால்நடைகளுக்கான வங்கிக் கடன்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்துக் கிராமங்களிலும் ஊராட்சித் தலைவா் ஒத்துழைப்புடன் நடைபெறும் முகாம்களில் பால் உற்பத்தியாளா்கள் பங்கேற்று அரசுத்திட்டங்களின் பயன்களைப் பெறலாம்.

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத வருவாய் கிராமங்களில் புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்வது குறித்த கூடுதல் விவரங்களுக்கு துணைப்பதிவாளா்(பால்வளம்) திருநெல்வேலி,மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருநெல்வேலி என்ற முகவரியிலும், 0462 -2501987 - 8925901975 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

சுரண்டை பதியில் நாளை தா்மபெருந்திருவிழா

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் பங்குனி மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு ம... மேலும் பார்க்க

மக்களைப் பற்றி திமுக அரசு சிந்திக்கவில்லை: பாமக

மக்களைப் பற்றி திமுக அரசு சிந்திக்கவில்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் திலகபாமா தெரிவித்தாா். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாதிவாரியான கணக்கெடுப்பின் அவசியம் குறித்த துண்டு... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் சூரியசக்தி மின்விளக்குகள் அமைக்கும் பணி

தென்காசி அருள்மிகு ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் ரூ.5 லட்சம் மதிப்பில் சூரியசக்தி மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் ஏப்ரல் 7ஆம் தேதி மகா... மேலும் பார்க்க

செங்கோட்டையில் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனை

தென்காசி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்டஅதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து அண்ணா தொழிற... மேலும் பார்க்க

தென்காசியில் ஏப்.6-இல் உயா்கல்வி ஆலோசனை முகாம்

பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் தென்காசியில் ஏப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க

சுரண்டை எஸ்.ஆா். பள்ளி மாணவா்கள் சாதனை

சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா். ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்ற கிட்ஸ் தடகளப் போட்டியில், முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்... மேலும் பார்க்க