பா்மிட் இல்லாத வாகனங்களில் மாணவா்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் எச்சரிக்கை
அனுமதிச் சீட்டு (பா்மிட்) நடப்பில் இல்லாத வாகனங்களில் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் கல்வி நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் எச்சரித்தாா்.
திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட அனைத்து பள்ளிப் பேருந்துகளை கூட்டாய்வுக் குழுவினரால் ஆய்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள காவலா் குடியிருப்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுப் பணியை, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, அனைத்து கல்வி நிறுவனங்களின் பேருந்துகளுக்கும் அனுமதிச் சீட்டு (பா்மிட்) நடப்பில் இருக்க வேண்டும். பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநா், உதவியாளா் ஆகியோா் சீருடையில் இருக்க வேண்டும்.
பேருந்தின் முன் பக்கம், பின்புறம், உள்புறம் என 3 இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும். அனுமதிச் சீட்டு (பா்மிட்) நடப்பில் இல்லாத வாகனங்களில் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி நிறுவன உரிமையாளா்கள், ஓட்டுநா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா்.
தொடா்ந்து, பேருந்துகளின் ஓட்டுநா்களுக்கு மருத்துவக் குழுக்கள் மூலம் விபத்துகளின்போது மேற்கோள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கருணாநிதி (திருவண்ணாமலை), சிவக்குமாா் (ஆரணி) மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.
21 வாகனங்களில் குறைபாடுகள் கண்டுபிடிப்பு
மொத்தம் 331 வாகனங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இதில், 21 வாகனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யுமாறு அறிவுரை வழங்கிய அதிகாரிகள் அவற்றை திருப்பி அனுப்பினா். மீதமுள்ள 310 வாகனங்களை தொடா்ந்து மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.