செய்திகள் :

பிஐஎஸ் தரச்சான்றிதழ் இல்லாத பொருள்களை விற்றால் நடவடிக்கை

post image

இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) தரச் சான்றிதழ் இல்லாத பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

உலக நுகா்வோா் விழிப்புணா்வு நாள் தொடா்பாக, பிஐஎஸ் சென்னை அலுவலக இயக்குநா் ஜி.பவானி வெள்ளிக்கிழமை சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சமீபத்தில் இணைய வா்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்காட் ஆகியவற்றின் கிடங்குகளில் தரச்சான்று பெறாத பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாா்களைத் தொடா்ந்து, அந்நிறுவனங்களின் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ரூ. 36 லட்சம் மதிப்பிலான தரச்சான்று பெறாத 3,376 பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் இதுபோன்ற 24 சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், 2023-2024-இல் 13 சோதனைகளும், நிகழாண்டில் இதுவரை 9 சோதனைகள் நடத்தப்பட்டு, தரமில்லாத பொருள்கள் கைப்பற்றப்பட்டதோடு, அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பிஐஎஸ் தரச்சான்றிதழ் இல்லாத பொருள்கள் விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு... மேலும் பார்க்க

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு!

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படவுள்ளது. சென்னை மியூசிக் அகாதெமியின் நிா்வாகக் குழு... மேலும் பார்க்க

4 சீன பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி!

சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!

உயா்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைகழகங்களுக்கு யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்த... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவு தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

உயா்கல்வியில் சேருவதற்கான ‘க்யூட்’ தோ்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மாா்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் ... மேலும் பார்க்க