பிகாருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்? உச்சகட்ட கண்காணிப்பில் காவல்துறை
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர் பிகாருக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் வரப்பெற்றதையடுத்து, உச்சகட்ட கண்காணிப்புப் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
தேரதல் நடைபெறவிருக்கும் நிலையில், ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் பிகாருக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியா - நேபாள எல்லை வழியாக மூன்று பயங்கரவாதிகள் பிகாருக்குள் நுழைந்திருப்பதாகவும், அவர்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.