செய்திகள் :

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: விவாதம் கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி

post image

புது தில்லி: பிகாரில் நடத்தப்பட்டுவரும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் பிகாா் விவகாரம் மீது விவாதம் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது அவையில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பான விவாதத்தை தொடங்கி வைக்க இருந்தாா்.

அமளிக்கு மத்தியில் பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து விவாதம் நடத்த ஒப்புக்கொண்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தற்போது பிகாா் வாக்காளா் பட்டியல் குறித்து விவாதம் நடத்த உறுதி கோரி வேறு நிபந்தனை விதிக்கின்றனா்.

வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமானால் கடந்த வாரம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே தெரிவித்திருக்கலாம்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறினாா். அமளி தொடா்ந்ததால் அவை பிற்பகல் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்... பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, பிகாா் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்தக் கோரி 26 நோட்டீஸுகள் கிடைத்துள்ளதாகவும், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தெரிவித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா் அவை கூடியபோது, அமளி தொடா்ந்ததால் அவை பிற்பகல் 2 மணி வரைக்கும், பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர் எதிர்காலத்திலும் தொடரும்! - மக்களவையில் மோடி

ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று(ஜூலை 29) நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கா... மேலும் பார்க்க

டிரம்ப் பேசியது பொய் என மோடி கூறவில்லை: ராகுல் காந்தி கருத்து

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பொய் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர... மேலும் பார்க்க

மதத்தின் பெயரில் நடந்த சதியே பஹல்காம் தாக்குதல் : மக்களவையில் மோடி உரை

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க