செய்திகள் :

பினராயி விஜயனுக்குப் பிறந்தநாள்: பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து!

post image

கேரள முதல்வர் பினராயி விஜயனின் 80வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது 80வது பிறந்தநாளாகும். முதல்வர் பினராயி விஜயன் அலுவலகப் பணிகளில் ஈடுபடுவதால் முறையான கொண்டாட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றதன் நான்காவது ஆண்டு நிறைவை மாநிலம் கொண்டாடியதன் ஒரு நாளுக்குப் பிறகு அவரது பிறந்தநாள் வந்துள்ளது.

அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கேரள முதல்வருக்கு சமூக ஊடகங்களின் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவில்,

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இடதுசாரித் தலைவர் நீண்ட ஆரோக்கியமான வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இறைவன் அவருக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆசிர்வதிக்கட்டும் என்று அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வு மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும், வரவிருக்கும் ஆண்டு ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் நிறைந்ததாக இருக்கட்டும்" என்று அவர் கூறினார்.

பஞ்சாபில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 5 நாள் காவல்

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜலந்தர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராமன் ... மேலும் பார்க்க

ரூ.25 லட்சம் பண மோசடி: சக வீராங்கனை மீது தீப்தி சர்மா புகார்!

யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகாரளித்துள்ளார்.சமீபத்தில் முடிவடைந்த மகளிர் ப... மேலும் பார்க்க

அசாமில் 9 வங்கதேசத்தினர் கைது

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மோரிகான், மிகிர்பேட்டா மற்றும் தரம்துல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஜாகி... மேலும் பார்க்க

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க