செய்திகள் :

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

post image

2019 ஆம் ஆண்டில் வடகொரியாவில் உளவு தொடர்பாக அமெரிக்கா முயற்சி செய்ததாக அமெரிக்க செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் வடகொரியாவில் உளவுபார்ப்பு சாதனத்தைப் பொருத்த அமெரிக்காவின் சீல் குழு 6 (US SEAL Team 6) முயற்சித்ததாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. இந்தக் குழுதான், ஒசாமா பின்லேடனை கொல்லவும் பணிக்கு உட்படுத்தப்பட்டது.

கடலுக்கடியில் நீந்தி, இலக்கின் கரையை அடைந்து, உளவுபார்ப்பு சாதனத்தை அங்கு பொருத்தி அல்லது நிலைநிறுத்திவிட்டு, ட்ரோன்கள் பார்வையில் இருந்து தப்பித்து மீண்டு வருவதுதான் இந்தக் குழுவின் பணி.

ஆனால், 2019-ல் வடகொரியாவின் கரையை அடைந்தபிறகு, வடகொரிய மீனவர்கள் வருவது தெரிந்தவுடன், படகில் இருந்தவர்களைக் கொன்று, அவர்களைக் கடலில் வீசியதாகவும் தகவல் தெரிவிக்கிறது. படகில் இருந்த மூவரும் நிராயுதபாணியான பொதுமக்கள் என்றும், அவர்களின் உடல் கடலில் மூழ்க வேண்டும் என்பதற்காக மார்பைக் கிழித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, உளவுபார்ப்பு சாதனமும் பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவில் மனிதர்களை உளவுபார்க்க வைப்பதோ அவர்களின் தலைமையைக் கண்காணிப்பதோ கடிது. அதுமட்டுமின்றி, வடகொரியாவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் தோல்வி அல்லது பணயக் கைதிகள் நிலைமைக்கு வழிவகுக்கும்.

இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்புகையில், அதனைப் பற்றி தெரியாது என்று அவர் மறுத்து விட்டார்.

US Navy SEALs killed North Korean civilians during botched mission

புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!

‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுந... மேலும் பார்க்க

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

உக்ரைனில் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவி ரஷியா ஞாயிற்றுக்கிழமை(செப். 7) தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் ரஷியா ராணுவ படையெடுப்பை தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், அதன்பின் நடத்தப்ப... மேலும் பார்க்க

காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிர்சியில் ஈடுபட்டுள்ளன. இவ்விரு நாடுகளின் சாகர்மாதா நட்புறவுக் கொல்கையின்கீழ், ஐந்தாம் ஆண்டாக இந்த ராணுவப் பயிற்சி நிகழ்ச்சி இன்... மேலும் பார்க்க

ஜப்பான் பிரதமர் ராஜிநாமா!

பிரதமர் மோடி ஜப்பான் சென்று பேச்சுவார்த்தை நடத்திய 10 நாள்களுக்குள் அந்நாட்டின் பிரதமர் ஷிகேரு இஷிபா ராஜிநாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பானுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பாடகி மீது கரடி தாக்குதல்

பாகிஸ்தான் பாடகி குராத்துலைன் பலூச் மீது கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பிரபல பாடகியாக அறியப்படுபவர் குராத்துலைன் பலூச். இவர் பல்டிஸ்தானில் உள்ள கிராமங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். பாகிஸ்தானின் பஜாவூர் மாவட்டத்தில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண... மேலும் பார்க்க