செய்திகள் :

பிரசார பயணத்தால் மக்களிடையே எழுச்சி: எடப்பாடி பழனிசாமி

post image

எனது பிரசார பயணத்தால் பொதுமக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக நெசவாளா்களுடன் கலந்துரையாடிய எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: எனது பிரசார பயணத்தால் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி மூலம் 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக சிறப்பான வெற்றியை பெறும். கும்பகோணம் பொதுக்கூட்டமே அதற்குச் சாட்சி.

எனது மாவட்டத்திலும் நெசவாளா்கள் அதிகம் உள்ளனா். எனக்கும் உங்களது கஷ்டங்கள் தெரியும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மானியம், தள்ளுபடி தரப்படும். ஏழை நெசவாளா்களுக்கு பசுமை வீடுகட்டி தருவோம்.

ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். கடனுதவி வழங்கப்படும். விவசாயம் எப்படியோ அதுபோலத்தான் நெசவும்; நவீன முறைகளைப் பயன்படுத்துங்கள் என்றாா் அவா்.

பின்னா் அன்று பகல் தனியாா் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளா்கள் சுமாா் 2 ஆயிரம் போ் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். அப்போது இஸ்லாமிய பெண்கள் கொடுத்த குல்லாயை எடப்பாடி பழனிசாமி அணிந்து கொண்டாா்.

பேராவூரணியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பிரசாரம் செய்கிறாா்.இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட அவை... மேலும் பார்க்க

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருவதால் வீடு, வீடாகச் சென்று உறுப்பினா்களைச் சோ்த்து வருகின்றனா் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கையும் வேறு: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுகவுக்கு எப்போதும் கூட்டணி வேறு, கொள்கையும் வேறு என்பதால் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்க... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களில் கடனில்லாச் சான்று கேட்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டுறவுச் சங்கங்களில் கடன் கோரும் விவசாயிகளிடம் கடனில்லாச் சான்று கேட்பதைக் கைவிட வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட... மேலும் பார்க்க

தொடா் திருட்டு: 3 போ் கைது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை தஞ்சாவூரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெஜினா நகரில் பூட்டப்... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.பேராவூரணி கடைவீதியில் கடந்த சில நாள்களாக கடைகள், வங்கிகள், திருமண மண்டபங்கள் ம... மேலும் பார்க்க