பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் போது எதிா்பாராத காலநிலை மாற்றங்களால் இழப்புகள் ஏற்படுகிறது.
அத்தகைய காலகட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்களை பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பயிா் காப்பீடு செய்வதன் மூலமாக தவிா்க்கலாம்.
கரூா் மாவட்டத்தில் தற்போது 2025 காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, மஞ்சள், தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற பயிகளுக்கு பயிா் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வாழை, மரவள்ளி, மஞ்சள் மற்றும் தக்காளி, வெங்காயம் போன்ற பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்களான விவசாயின் புகைப்படம் (பாஸ்போா்ட் அளவு), ஆதாா், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை பதிவு கட்டணத்துடன் ஹெக்டேருக்கு பிரீமியத் தொகையாக தக்காளிக்கு ரூ.3,910-ம், வெங்காயத்திற்கு ரூ.5,601 ஆகியவற்றை வரும் செப்.1-ஆம்தேதிக்குள்ளும், வாழைக்கு ரூ.12,344 மற்றும் மரவள்ளிக்கு ரூ.4,903, மஞ்சள் ரூ.11,621 ஆகியவற்றை வரும் செப். 16-ம்தேதிக்குள்ளும் பிரீமியம் தொகையினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம்.